அமலாக்க அதிகாரிகளை திட்டிய மாதுக்கு அபராதம்

அமலாக்க அதிகாரிகளை திட்டிய மாதுக்கு அபராதம்

2 mins read
57160e83-74e4-471d-b9d8-9232b3e364e4
வேலை செய்யாததால் தன் மீது கருணை காட்டுமாறு சுபைடா நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அம­லாக்க அதி­கா­ரி­களை மோச­மாக திட்­டி­ய­தோடு இனத்­தைக் குறிப்­பிட்டு பேசி­ய­தற்­காக நேற்று 58 வயது சுபைடா சைனூல் அபி­தீ­னுக்கு 3,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அவ­ரது மகள் சட்­ட­வி­ரோ­த­மாக புகை­பி­டித்­துக் கொண்­டி­ருந்­ததை அதி­கா­ரி­கள் கையும் கள­வு­மாக பிடித்­த­தால் அவர் ஆத்­திரமடைந்த தாகத் தெரிகிறது.

மலே­சி­ய­ரான திரு காளி­தா­சன் நாகப்­ப­னும் 31, அவ­ரது சக அம­லாக்க அதி­கா­ரி­யும் பிடோக் ரிசர்வோர் ரோட்­டில் உள்ள புளோக்­கின் காலி­யி­டத்­தில் சுபை­டா­வின் மகள் நூருல் அசி­ய­கின் அப்­துல் ரஹ்­மான் புகை­பி­டித்­துக் கொண்­டி­ருப்­ப­தைக் கண்­ட­னர். இரு செர்ட்­டிஸ் சிஸ்கோ அதி­கா­ரி­களும் அப்­போது தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­துக்­காக வேலை செய்­த­னர்.

அழைப்­பாணை அனுப்­பு­வ­தற்­காக அடை­யாள அட்­டை­யைக் கேட்­ட­போது நூருல் தன்­னி­டம் இல்­லை­யென்று கூறி­னார். இத­னால் தனது தாயாரை அடை­யாள அட்­டையை நூருல் எடுத்து வரச் சொன்­னார். அங்கு வந்த சுபைடா, மக­ளின் அடை­யாள அட்­டையை அதி­காரிகளி­டம் காட்ட மறுத்­து­விட்­டார். காவல்­து­றை­யி­னர் வந்த பிறகே அடை­யாள அட்­டையை காட்­டு­வேன் என்று சுபைடா கூறி­ய­தால் காவல்­து­றை­யி­னர் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

அதற்­குள் அதி­கா­ரி­களை ஆங்­கி­லம் மற்­றும் மலாய் மொழி­யில் தகாத வார்த்­தை­க­ளால் சுபைடா சாடி­னார். கன்­னத்­தில் அறை­வ­தா­க­வும் அவர் மிரட்­டி­னார்.

அங்கு வந்த காவல்துறையினர் அடை­யாள அட்­டை­யைப் பெற்று நூரு­லின் விவ­ரங்­களை காளி­தா­ச­னி­டம் தெரி­வித்­த­னர்.

நீதி­மன்­றத்­தில் நேற்று நிறுத்­தப்­பட்ட சுபைடா, தான் வேலை செய்­யா­த­தால் கரு­ணை காட்­டு­மாறு கேட்­டுக் கொண்­டார்.

இதை­ய­டுத்து 200 வெள்ளி அப­ரா­தத்தை உடனே கட்­டு­மா­றும் எஞ்­சிய 2,800 வெள்­ளியை அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 7ஆம் தேதிக்­குள் கட்ட வேண்­டும் என்­றும் சுபை­டா­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.