கண்காணிப்பின்கீழ் சுயமாக ஆன்டிஜென் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அடுத்த வாரம் முதல் அதனை எளிமையாக மேற்கொள்ளலாம். சிங்கப்பூர் திரும்பும் பயணிகளுக்கும் சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
தீவு முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களில் விரைவுப் பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பாக தனியார் மருத்துவர்கள், கடைத்தொகுதிகளை நடத்து வோர் ஆகியோருடன் ஹோட்டல் குழுமங்களுடனும் சுகாதார அமைச்சு பங்காளித்துவம் செய்து கொண்டுள்ளது.
அதன் பயனாக 'அடுத்த சில வாரங்களில்' கூடுதலாக 60 நிைலயங்கள் உருவாகும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் விரைவுப் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கை 120 என இருமடங்காகிவிடும்.
கேப்பிட்டலேண்ட் மற்றும் ஃபிரேசர்ஸ் போன்ற கடைத்
தொகுதிகள், ஃபார் ஈஸ்ட் ஹாஸ்பிட்டலிட்டி குரூப், இண்டர்காண்டினெண் டல் ஹோட்டல் குரூப், அக்கார் ஹோட்டல்ஸ், ரிசோர்ட்ஸ் ேவார்ல்ட் செந்தோசா போன்றவற்றின் சொத்துகளில் அமையவிருக்கும் நிைலயங்களையும் மொத்த எண்ணிக்கை உள்ளடக்கும்.
தற்போது கிட்டத்தட்ட 60 விரைவுப் பரிசோதனை நிலையங்கள் உள்ளன. பயிற்சிபெற்ற பணியாளர்களின் கண்காணிப்பின்கீழ் பொதுமக்கள் இங்கு சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
அதற்கு முன்பதிவு தேவை. இந்த நிலையங்களில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் அல்லது தனியார் நிறுவனங்களுடன் பங்காளித்துவம் ஏற்படுத்திய அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்டவை.
இந்த நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிசோதனைக்கும் $15 கட்டணம். வேலையிடங்களில் வழக்கமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள், நிகழ்ச்சிகளுக்கு முன் பரிசோதனை செய்து கொள்வோர் உள்ளிட்டோர் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு முன்னர் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோரும் இந்நிலையங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

