மொடர்னா பூஸ்டருக்கு முன்பதிவு தேவையில்லை என அறிவிப்பு
மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தகுதியுடையோர் அதற்காக முன்பதிவு செய்யத் தேவை இல்லை. அவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாகச் செல்லலாம் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரி வித்துள்ளார். இந்த டிசம்பர் மாதத்தில் அதிகமான மொடர்னா பூஸ்டர் தடுப்பூசிகள் ைகயிருப்பு இருப்பதாகவும் அவர் நேற்று கூறினார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் உடல்நிலை கண்காணிப்புக்குக் காத்திருக்க வேண் டிய நேரம் 30 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட உள்ளது. "பூஸ்டர் தடுப்பூசி போட்ட பின்னர் கடுமையான எதிர்விளைவு ஏற்படும் சம்பவங்கள் ஆகக்குறைவாக இருப்பதை எங்களது தரவுகள் காட்டு கின்றன. நேரத்தைக் குறைப்பதன் மூலம் அதிகமானோ ருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடமுடியும்," என்று நேற்று கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங் விளக்கினார்.
"பூஸ்டர் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. அதிகம் பரவக்கூடிய ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக்கூடியது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொள்ளைநோய் சிரமத்தில் கைகொடுத்த செல்லப்பிராணிகள்
கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் தங்களது மன
நலத்தை மேம்படுத்த செல்லப்பிராணிகள் உதவியதாக ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 89 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். 'போரிங்கர் இங்கெல்ஹெய்ம் அனிமல் ஹெல்த் சிங்கப்பூர்' என்னும் அனைத்துலக விலங்குநல நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் நாய், பூனைகளை வளர்க்கும் 1,018 பேர் கலந்துகொண்டனர். கடந்த அக்டோபர் 8 முதல் அக்டோபர் 27 வரை ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவு குறித்து விளக்கிய ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அர்மின் வீஸ்லெர், கொள்ளைநோய் காலத்தில் மனிதர்
களுக்கு உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியான ஆதரவை வழங்குவதில் செல்லப்பிராணிகள் முக்கிய பங்கு வகித்த
தாகக் குறிப்பிட்டார். அந்தக் காலகட்டத்தில் மனிதர்களுக்கும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்ததாகவும் அவர் கூறினார். ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் கடந்த ஆண்டு கொள்ளைநோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது அல்லது அதற்குப் பின்னர் செல்லப்பிராணிகளைத் தத்து எடுத்ததாகக் கூறினர்.
விருது வழங்கி கௌரவம்
ஆஸ்திரேலிய புதர்த் தீயைச் சமாளித்த விதத்திற்காகவும் பயங்கரவாத முறியடிப்புச் செயல்களுக்காகவும் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 89 அதிகாரிகள் நேற்று வெளிநாட்டுப் பணிக்கான சேவை (ஓஎஸ்எம்) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களின் அர்ப்பணிப்புகளை அப்போது அவர் பாராட்டினார்.

