உணவங்காடிக்கடை தத்தெடுப்பு திட்டத்தில் மேலும் 7 நிலையங்கள்

உணவங்காடிக்கடை தத்தெடுப்பு திட்டத்தில் மேலும் 7 நிலையங்கள்

1 mins read
f1a06c7b-485b-4838-ad1f-bbaa0c0d363b
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், டாக்டர் ஏமி கோர், டான் கியட் ஹாவ், (வெள்ளை உடை) ஆகியோர் பெட்டிகளில் உணவுப் பொருட்களை வைக்கிறார்கள். இவை சாங்கி பொது மருத்துவ மனையில் பணியாற்றும் முன்களப் பணியாளர் களுக்கு விநியோகிக்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள உண­வங்­காடிக் கடைக்­கா­ரர்­க­ளின் வரு­மா­னத்­தைப் பெருக்­க­வும் இணை­யத்­தில் அவர்­களின் ஈடு­பாட்டை அதி­க­ரிக்­க­வும் உத­வக்­கூ­டிய ஒரு செயல்­திட்டத்தில் அடுத்த ஆண்டு மேலும் ஏழு உணவங்­காடி நிலை­யங்­கள் சேர்க்­கப்­படும். டிபி­எஸ் வங்கி நேற்று இதனை அறி­வித்­தது.

'உண­வங்­காடி நிலை­யம் தத்­தெடுப்பு' என்ற அந்த வங்­கி­யின் செயல்­திட்­டத்­தின்கீழ் இப்­போது மூன்று உண­வங்­காடி நிலை­யங்­கள் பல­ன­டை­கின்­றன.

அந்­தச் செயல்­திட்­டம் செப்­டம்­பர் மாதம் 4ஆம் தேதி தஞ்­சோங் பகார் பிளாசா சந்தை, உணவு நிலை­யத்­தில் தொடங்­கி­யது.

பிறகு அந்­தத் திட்­டம் இந்த மாதத் தொடக்­கத்­தில் சைனா­ட­வுன் காம்பிளக்ஸ், எண் 58 நியூ அப்­பர் சாங்கி ரோட்­டில் உள்ள 'தி மார்க்­கெட் பிளேஸ்' ஆகிய நிலை­யங்­களுக்கு நீட்­டிக்­கப்­பட்­டது.

தத்தெடுப்புத் திட்­டத்­தின்­கீழ் இந்த வங்கி ஒட்­டு­மொத்­த­மாக அந்­தக் கடை­களில் இருந்து உணவு­வகைகளை வாங்கி விநி­யோ­கிக்­கும். தி மார்க்­கெட் பிளேஸ் நிலை­யத்­தில் நடந்த ஒரு சமூக நிகழ்ச்சி­யில், செயல்­திட்­டம் விரி­வ­டை­வது பற்றி நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அப்­போது எட்டு உண­வங்­காடிக் கடை­களில் இருந்து 500 உணவுப் பொட்டலங்கள் வாங்­கப்­பட்டு, அவை பக்­கத்­தில் உள்ள சாங்கி பொது மருத்­து­வ­மனை­யில் பணி­யாற்­றும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

அந்த நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், உள்­ளிட்ட பிர­மு­கர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.