தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடுப்புக்காவலில் இருந்த இரு சிங்கப்பூரர்கள் விடுவிப்பு

1 mins read
310967b2-b9da-4836-820b-cd8af80158eb
-

தீவி­ர­வாத மனப்­போக்கைத் தாங்­க­ளா­கவே வளர்த்­துக்­கொண்ட இரண்டு சிங்­கப்­பூ­ரர்­கள் கடந்த ஆகஸ்ட் மாதம் விடு­விக்கப்­பட்­ட­னர். அவர்­கள் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு இருந்­த­னர்.

நல்ல நடத்­தை­யு­டன் அவர்­கள் காணப்­பட்­ட­தால் அவர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர் என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பிரிவு (ஐஎஸ்டி) நேற்று தெரி­வித்­தது.

முகம்­மது ஷாமின் முகம்­மது சித்­திக், 35, முகம்­மது உமர் மகாடி, 38, என்ற அந்த இரு­வ­ரும் தடுப்­புக்காவ­லில் வைக்க வேண்­டிய அள­வுக்கு பாது­காப்பு மிரட்­ட­லாக இப்போது இல்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக அறிக்கை ஒன்­றில் இந்­தத் துறை குறிப்­பிட்­டது.

ஷாமின் 2015 மே மாதம் கைதாகி சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். அவர் சிரியா சென்று ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பில் சேர்­வதற்குத் திட்­டு­மிட்டு இருந்­தார் என்­பது இந்­தத் துறை­யின் புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­தது.

அவர் பல நிபந்­த­னை­கள், கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இணங்கி நடக்­க­வேண்­டும் என்ற கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின்­கீழ், இந்த ஆண்டு ஆகஸ்ட்­டில் விடு­தலை செய்­யப்­பட்­ட­தாக ஐஎஸ்டி தெரி­வித்­தது.

முகம்­மது உமர், 2016 ஆகஸ்ட்­டில் தடுத்­து­வைக்­கப்­பட்­டார்.

முகம்­மது உம­ரும் அவ­ரு­டைய மனை­வி­யும் தங்­கள் பிள்­ளை­களு­டன் சிரியா சென்று ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்­பு­டன் சேர்ந்து போராட திட்­ட­மிட்டு இருந்­த­னர்.

தடுப்­புக் காவல் நிறுத்­தி­வைப்பு உத்­த­ர­வின்­கீழ், குறிப்­பிட்ட நிபந்­த­னை­க­ளு­டன் உமர் விடு­விக்­கப்­பட்டு இருக்­கி­றார்.

இத­னி­டையே, இதர ஆறு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்ட கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வு­கள் ஜூன் முதல் நவம்­பர் வரைப்­பட்ட காலத்துடன் அது முடி­வுக்கு வரு­மாறு அனு­மதி வழங்­கப்­பட்டு இருக்­கிறது.