பொது இடத்தில் ஆர்ப்பாட்டம்: ஆர்வலர் மீது இன்று குற்றச்சாட்டு

பொது இடத்தில் ஆர்ப்பாட்டம்: ஆர்வலர் மீது இன்று குற்றச்சாட்டு

1 mins read
1ef60f67-f8ed-4a90-b8a8-dd48807e653a
-

அனு­மதி இல்­லா­மல் பொது இடத்­தில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­தா­க­வும் வாக்­கு­மூ­லம் ஒன்­றில் கையெழுத்திட மறுத்­த­தா­க­வும் கில்­பர்ட் கோ என்ற உள்­ளூர் ஆர்­வ­லர் மீது இன்று குற்­றம் சுமத்­தப்­படும்.

அந்த 60 வயது ஆட­வர் மே 1ஆம் தேதி குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணையக் கட்­ட­டம் அருகே ஒரு பதா­கை­யு­டன் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'இந்­தி­யா­வில் இருந்து வரும் எல்லா விமா­னங்­க­ளை­யும் அன்­பு­கூர்ந்து தடை செய்­யுங்­கள். நாங்­கள் இன­வாதி அல்ல. இது வெறும் எச்­ச­ரிக்­கை­தான்' என்று அந்­தப் பதாகை தெரி­வித்­தது.

அதே­நா­ளன்று தான் நடத்­திய ஆர்ப்­பாட்­டத்தைத் தன் படத்­து­டன் ஃபேஸ்புக்­கில் அந்த ஆடவர் பதி­வேற்­றி­னார்.

அந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து காவல்துறை புலன்­வி­சா­ரணை நடத்­தி­யது. அப்­போது வாக்­கு­மூ­லத்­தில் கையெ­ழுத்­திட அவர் மறுத்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­காக செவ்­வாய்க்­கி­ழமை கோ கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்­டார். அத­னைத் தொடர்ந்து நீதி­மன்­றத்­தில் தான் எதிர்­நோக்­கும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் பற்றி அவர் ஃபேஸ்புக்­கில் எழு­தி­னார்.

குற்­றச்­சாட்­டு­களை எதிர்த்து சிறைச்­சா­லைக்­குச் செல்­வேன் என்று அதில் அவர் குறிப்­பிட்­டார்.