ஈராண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெறும் பட்டமளிப்பு விழா

ஈராண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெறும் பட்டமளிப்பு விழா

1 mins read
35eaf4ec-c4d9-4d7a-abe8-f2d14b9176cb
-

கொவிட்-19 கார­ணத்­தால் கிட்­டத்­தட்ட ஈராண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (எஸ்­எம்யு) பட்­ட­ம­ளிப்பு விழா நடை­பெ­ற­வில்லை. இதை­ய­டுத்து, 2020ஆம் ஆண்­டின் பட்­ட­தா­ரி­களுக்கு நேற்று பட்­ட­ம­ளிப்பு விழா நேரடி நிகழ்­வாக நடை­பெற்­றது.

ஆறு நாள்­க­ளுக்கு நடை­பெ­ற­வுள்ள பட்­ட­ம­ளிப்பு விழா­வில் மொத்­தம் 2,921 எஸ்­எம்யு மாண­வர்­கள் தங்­க­ளின் பட்­டத்­தைப் பெறு­வர்.

2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தில் நடை­பெ­று­வ­தாக இருந்த இவர்­க­ளின் பட்­ட­ம­ளிப்பு விழா, கொவிட்-19 தொற்­றுப் பர­வல் அதி­கரித்த கார­ணத்­தால் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

நேற்று நடை­பெற்ற முதல் பட்ட­மளிப்பு விழா­வில் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் கலந்து­கொண்­டார்.

"வாழ்க்கை அளிக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் நிலை­யில் நீங்­கள் இருக்­கி­றீர்­கள். வாழ்க்­கைத்­தொ­ழில், குடும்­பம் என உங்­கள் வாழ்க்­கை­யில் இன்­னும் பல­வற்றை நீங்­கள் தொடங்க உள்­ளீர்­கள்," என்­றார் அவர்.

வேலை­வாய்ப்­பு­களை ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு பட்­ட­தா­ரி­க­ளுக்கு எஸ்­எம்யு தலை­வர் ஹோ குவொன் பிங்­கின் தம் உரை­யில் அறி­வு­றுத்­தி­னார்.