கடன் ஏற்பாடுகள், சம்பள ஆதரவை நீட்டிக்கவேண்டும்

2 mins read
b126be7d-7ad2-455e-a952-0caf28f66dd6
-

கொவிட்-19 தொற்­றுக்­குப் பிந்­தைய புதிய பொரு­ளி­ய­லில் நிறு­வ­னங்­களுக்கு உதவ சம்­பள ஆத­ர­வுத் திட்­ட­மும் தற்­கா­லிக கடன் ஏற்­பாடு­களும் 2022 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் தொழில்­துறை கூட்­ட­மைப்பு பரிந்துரைத்துள்ளது.

அடுத்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை மைய­மாக வைத்து அந்தக் கூட்­ட­மைப்பு 16 பரிந்­து­ரை­களை முன்­வைத்து உள்­ளது.

நிறு­வ­னங்­கள், உள்­நாட்டு, வட்­டார, உலக வளர்ச்சி வாய்ப்­பு­களை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள உத­வு­வதே அந்­தப் பரிந்­து­ரை­க­ளின் ஒட்­டு­மொத்த நோக்­கம் என்று கூட்­ட­மைப்பு கூறி­யது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு உள்ள தொழில்­து­றை­க­ளுக்கு வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் கிடைக்­கக்கூடிய 25 விழுக்­காட்டு சம்­பள உதவி, நிறு­வ­னங்­கள் மீட்சிக்கு ஆயத்­த­மாக உத­வும் வகை­யில் மேலும் மூன்று மாதங்­களுக்கு நீட்­டிக்­கப்­பட வேண்­டும் என்று அது கோரியுள்­ளது.

இந்­தத் துறை­களில் உணவு, பான தொழில்­துறை, சில்­லறை வர்த்­த­கம், உட­லு­றுதி, மேடை கலை, கல்வி, சுற்­றுலா, அரும்­பொ­ரு­ள­கம், கலைக்­கூ­டம், வர­லாற்று இடங்­கள், குடும்ப பொழு­து­போக்கு ஆகிய தொழில்­து­றை­கள் அடங்­கும்.

வேலை ஆத­ர­வுத் திட்­டம் நவம்­பர் 22 முதல் 10 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­பட்­டது. டிசம்­பர் 19ஆம் தேதி வாக்­கில் அது முடி­வுக்கு வந்­து­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

அதி­க­ரிக்­கும் செல­வு­களை நிறு­வ­னங்­கள் சமா­ளிக்க உத­வும் நோக்­கத்­தில் 2023 மார்ச் 31 வரை தற்­கா­லிக கடன் ஏற்­பாட்டுத் திட்­டங்­கள் நீட்­டிக்­கப்­பட வேண்­டும்.

அதோடு, ஒப்­பந்­தங்­க­ளுக்­கான இடை­நி­றுத்­த­மும் நீட்­டிக்­கப்­பட வேண்­டும் என்று அது குரல் கொடுத்து உள்­ளது.

கொவிட்-19 ஏஆர்டி பரி­சோ­தனைக் கரு­வி­க­ளுக்கு மானி­யம் தேவை. வெளி­நாட்டு ஊழி­யர்­களை இங்கு கொண்­டு­வர ஆகும் செலவை ஈடு­செய்ய அர­சாங்­கம் உதவ வேண்­டும் என்­றும் கூட்­ட­மைப்பு கோரி உள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக சவால்­கள் தொடர்ந்த போதி­லும் அடுத்த ஆண்­டில் மீட்­சி­யும் வளர்ச்­சி­யும் ஏற்­படும் என்று இப்­போது நிறு­வனங்­கள் அதிக நம்­பிக்­கை­யு­டன் இருப்­பதாக கூட்­ட­மைப்­பின் தலைமை நிர்­வாகி லாம் யி யோங் தெரி வித்தார்.

நிறு­வ­னங்­கள் இப்­போ­தைய சவால்­களில் இருந்து மீண்­டு­வ­ரவும் எதிர்­கால வாய்ப்­பு­க­ளைப் பயன்­படுத்­திக்கொள்­ள­வும் உத­வும் வகை­யில் பரிந்­து­ரை­கள் உரு­வாக்­கப்­பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2022 வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற சிங்கப்பூர் தொழில்துறை கூட்டமைப்பு பரிந்துரை