என்றுமில்லா அளவாக 98,700 உள்ளூர் வேலைவாய்ப்புகள்

என்றுமில்லா அளவாக 98,700 உள்ளூர் வேலைவாய்ப்புகள்

2 mins read
b1be342c-8285-44c6-89e2-8dc1e6151f5b
-

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள், வளர்ச்சித் துறை­களில் காணப்­படும் மனி­த­வள தேவை இரண்­டும் சேர்ந்து சிங்­கப்­பூ­ரில் செப்­டம்­பர் மாதத்­தில் வேலை­வாய்ப்­பு­கள் எண்­ணிக்­கையை என்­று­மில்லா அள­வுக்கு 98,700ஆக உயர்த்தியுள்­ளது.

இதை நேற்­றுத் தெரி­வித்த மனி­த­வள அமைச்சு, ஜூன் மாதத்­தில் இருந்த 92,100 வேலை­வாய்ப்பு எண்­ணி­கை­யு­டன் ஒப்­பிட இது பெரும் அதி­க­ரிப்பு என்று தெரி­வித்­துள்­ளது.

வேலை­யின்றி இருக்­கும் ஒவ்­வொரு 100 ஊழி­யர்­க­ளுக்­கும் 209 வேலை­வாய்ப்­பு­கள் காத்­தி­ருந்­தன என்­றும் அமைச்சு விளக்­கி­யது.

இதுவே கடந்த ஜூன் மாதம், ஒவ்­வொரு 100 வேலை­யில்லா ஊழி­யர்­க­ளுக்­கும் 163 வேலை­வாய்ப்­பு­கள் காத்­தி­ருந்­த­தாக அமைச்சு கூறு­கிறது.

இத்­து­டன், வேலை­வாய்ப்பு அதி­க­ரிப்பு தற்­பொ­ழுது சற்று மெது­வ­டைந்­தி­ருந்­தா­லும், தொடர்ச்­சி­யாக ஐந்து காலாண்­டு­க­ளுக்கு அதி­க­ரித்து வந்­துள்­ளது கவ­னிக்­கத்­தக்­கது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக வெளி­நாட்டு ஊழி­யர் வருகை குறைந்­த­தால், உள்­ளூ­ரில் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளைத் தவிர்த்து பார்த்­தால், 2019ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­துக்­குப் பின் வேலை­யின்றி இருக்­கும் மொத்த ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 173,100 வரை குறைந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

ஒர்க் பெர்­மிட் ஊழி­யர்­கள், குறிப்­பாக, உற்­பத்தி, கட்­டு­மா­னம், உணவு -பானத் துறை, நிர்­வா­கம், அதற்கு ஆத­ரவு சேவை வழங்­கும் துறை களில் வேலை­யின்மை காணப்­ பட்­ட­தாக அமைச்சு விளக்கியது.

இந்­தத் துறை­களில் இருக்­கும் வேலை­வாய்ப்­பு­கள் மொத்த வேலை­வாய்ப்­பு­களில் 38% என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"வேலை­வாய்ப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யும், வேலை­யில்­லா­தோ­ருக்­கான வேலை காலி இடங்­களின் விகி­த­மும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­படும் வரை அதி­க­மா­கவே இருக்­கும்," என்று அமைச்சு தனது மூன்­றாம் காலாண்டு ஊழி­யர் சந்தை அறிக்­கை­யில் தெரி­விக்­கிறது.

மேலும், நிபு­ணத்­துவ சேவை, தக­வல்-தொடர்பு, சுகா­தா­ரம், சமூக சேவை­கள் போன்ற வளர்ச்சி கண்­டு­வ­ரும் துறை­களில் நீடித்த ஊழியர் தேவை இருந்­த­தா­க­வும் அதற்­கேற்­றாற்­போல், இந்­தத் துறை­களில் சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­கள் வேலை­வாய்ப்­பு­கள் பெறு­வ­தும் அதி­க­ரித்த­தாக அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.