தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

22ஆம் தேதி உயர்நிலைப் பள்ளி விவரங்கள்

1 mins read
4c59e114-bf15-4fc3-be40-2bd37c0aff6a
-

இவ்­வாண்டு தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வில் (பிஎஸ்எல்இ) தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளுக்­கான உயர்­நி­லைப் பள்­ளித் தெரி­வின் முடி­வு­கள் வரும் 22ஆம் தேதி வெளி­வரும் என்று கல்­வி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

மாண­வ­ரின் தொடக்­கப்­பள்ளி, குறுஞ்­செய்தி, எஸ்1 இணை­யக் கட்­ட­மைப்பு ஆகி­யவை வழி­யாக மாண­வர்­கள் முடிவுகளைப் பெற லாம். முடி­வைப் பெற்­ற­தும் மாண­வர்­ மறு­நாள் புதிய பள்­ளிக்­குச் செல்ல வேண்­டி­ய­தில்லை.

தங்­க­ளது புதிய பள்­ளி­க­ளின் இணை­யத்­த­ளங்­க­ளுக்­குச் சென்று பாடப் புத்­த­கங்­க­ளை­யும் சீரு­டை­களை­யும் வாங்­கு­வது குறித்த தக­வல்­க­ளை 22ஆம் தேதி முதல் தெரிந்­து­கொள்­ள­லாம்.

பெற்­றோர் 'பேரன்ஸ் கேட்வே' இணை­யத்­தளம் வாயிலாக புதிய பள்­ளி­க­ளி­ட­மி­ருந்து சில தக­வல்­களை­யும் பெற­லாம்.

ஏற்­கக்­கூ­டிய கார­ணங்­க­ளால் ஜன­வரி 4ஆம் தேதி­யன்று உயர்­நி­லைப் பள்­ளி­க­ளுக்­குச் செல்ல முடி­யாத மாண­வர்­கள் பள்­ளி­களை நேர­டி­யா­கத் தொடர்­பு­கொண்டு அந்­தப் பள்­ளி­களில் தங்­க­ளது இடம் உள்­ளதை உறுதி செய்­யலாம். அவர்­க­ளுக்­கான இடத்­தைப் பள்­ளி­கள் தக்­க­வைக்­கும் என்­று கல்வி­ அ­மைச்சு கூறியது. மேல் விவ­ரங்­களை கல்­வி­ய­மைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் காண­லாம்.