யூனோஸில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பலதுறை மருந்தகம் இன்று முதல் செயல்படவிருக்கிறது.
சிங்ஹெல்த் பலதுறை மருந்த கங்களில் இது, 9வது மருந்தக மாகும்.
யூனோஸ் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பத்து நிமிட தொலைவில் எண் 1 சின் செங் அவென்யூ வில் புதிய மருந்தகம் அமைந்துள்ளது.
நாள்பட்ட நோய்களுக்கும் இங்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்படும். ஊடுகதிர் வசதிகளும் மருந்தகத்தில் செய்யப்பட்டுள்ளன.
புதிய மருந்தகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சேவைகள், குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு ஊசிகள், பரிசோதனைகள், பல் சிகிச்சை உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும் என்று நேற்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்தது.
மருந்தகத்தில் புகுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள் நோயாளி களுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்கும்.
உதாரணமாக, மருத்துவர் பரிந்துரைக்கும் சீட்டுகள் தானாகவே இரண்டாவது மாடியில் உள்ள மருந்து வழங்கும் இடத்துக்கு வந்து விடும். நோயாளிகள் சுயமாக முன் பதிவு செய்யவும் கட்டணங்கள் செலுத்தவும் சாதனங்கள் வைக்கப் பட்டுள்ளன. யூனோஸின் பலதுறை மருந்தகத்துடன் சேர்த்து சிங்கப் பூரில் மொத்தம் 23 பலதுறை மருந்த கங்கள் உள்ளன.