தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிராங்கூனில் இரு ஆடவர்கள் கைது: 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
cabf0fd1-1888-4bba-aaa8-8d5add94b971
-

அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் சிராங்­கூன் வட்­டா­ரத்­தில் நடத்­திய அதி­ர­டிச் சோதனை நட­வடிக்­கை­யில் 2 கிலோ போதைப்­பொருள் சிக்­கி­ய­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று தெரி­வித்­தது.

சிராங்­கூன் அவென்யு 4ல் உள்ள ஒரு வீட்­டில் 37 வயது சிங்­கப்­பூ­ரர் ஒரு­வ­ரை­ அதி­காரி­கள் கைது செய்­த­னர். கிட்­டத்­தட்ட 44 கிராம் ஹெரா­யின் மற்­றும் போதைப்­பொ­ருள் புழக்­கத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் பொருள்­களும் அவ்­வீட்­டில் கண்டு­பி­டிக்­கப்­பட்­டன.

அதே வட்­டா­ரத்­தில் நிறுத்­தப்­பட்ட வாக­னம் ஒன்­றி­லி­ருந்து சுமார் 1.8 கிலோ ஹெரா­யின் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

நேற்று காலை அதே வட்­டாரத்­தில் நடத்­தப்­பட்ட மற்­றொரு சோதனை நட­வ­டிக்­கை­யில் 59 வயது சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் சிக்கி­னார். ஆட­வரிடம் போதைப்­பொருள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.