தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த 2 ஆண்டுகளில் 46,000 பிடிஓ வீடுகள்

2 mins read
854170d8-04fc-4ffd-9464-58c4b52a8d78
டெல்டா விளையாட்டு வளாகத்துக்கு எதிர்்ப் புறத்தில் உள்ள நிலப்பகுதியில் கிட்டத்தட்ட 1,500 வீடுகள் கட்டித் தரப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­

க­ளுக்­கான தேவை அதி­க­மாக இருப்­ப­தால் அடுத்த ஆண்­டி­லும் அதற்கு அடுத்த ஆண்­டி­லும் தலா 23,000 வரை தேவைக்கு ஏற்ப கட்­டித்­த­ரப்­படும் (பீடிஓ) வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­படும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

விற்­ப­னைக்கு விடப்­படும் பிடிஓ வீடு­க­ளின் எண்­ணிக்கை 35 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருப்­பதை இது காட்­டு­வ­தா­கக் கழ­கம் கூறி­யது

கடந்த ஆண்டு 17,000 பிடிஓ வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டதை அது சுட்­டி­யது.

புக்­கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட், காலாங் வாம்போ, குவீன்ஸ்­ட­வுன், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்­டா­ரங்­களில் கட்­டப்­படும் பிடிஓ வீடு­

க­ளுக்­காக அடுத்த ஆண்டு விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

இவ்­வாண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 100,000 வீடு­களை விற்­ப­னைக்கு விட வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் தயா­ராக இருக்­கும் என்று நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

தேவைக்கு ஏற்ப வீடு­கள் கட்­டப்­படும் என்­றார் அவர்.

பிடிஓ விடு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அமைச்­சர் லீ கூறி­னார்.

2019ஆம் ஆண்­டில் ஒரு பிடிஓ வீட்­டுக்கு 3.7 விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. இது இந்த ஆண்டு 5.5ஆக உயர்ந்­துள்­ளது.

கூடு­தல் வீடு­களை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் விற்­ப­னைக்கு விட்­ட­போ­தி­லும் விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்கை உயர்ந்­துள்­ளது. வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் 2019ஆம் ஆண்­டில் ஏறத்­தாழ 14,600 வீடு­களை விற்­ப­னைக்கு விட்­டது.

கடந்த ஆண்­டி­லும் இவ்­வாண்­டி­லும் தலா கிட்­டத்­தட்ட 17,000 வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன.

1980களின் பிற்­ப­கு­தி­யி­லும் 1990களி­லும் பிறந்த பலர் தற்­போது புதி­தா­கத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டுள்­ள­தால் அவர்­க­ளுக்கு வீடு தேவைப்­ப­டு­கிறது.

இத­னால் வீவக வீடு­க­ளுக்­கான தேவை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ள­தாக திரு லீ தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, சிறு குடும்­பங்­க­ளாக வாழ பலர் விரும்­பு­வ­தா­லும் கூடு­தல் வீடு­கள் தேவைப்

படு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அர­சாங்க நில விற்­ப­னைத் திட்­டம் மூலம் தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கப்­படும் என்று திரு லீ தெரி­வித்­தார்.

அடுத்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் ஏறத்­தாழ 2,800 வீடு­கள் உறுதி செய்­யப்­பட்ட பட்­டி­ய­லில் இருக்­கும். இது இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் இடம்­பெ­றும் வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யை­விட 40 விழுக்­காடு அதி­கம். தேவை அதி­க­ரித்­தால் தனி­யார் வீடு­க­ளுக்­குக் கூடு­தல் நிலம் ஒதுக்க அர­சாங்­கம் தயா­ராக உள்­ளது என்­றார் திரு லீ.