முதலாளிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வருமான உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதி பெற தங்கள் ஊழியர்
களுக்குச் செலுத்த வேண்டிய
மத்திய சேமநிதி சந்தாவை அவர்கள் அடுத்த மாதம் 14ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
வர்த்தக உருமாற்ற முயற்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் கிடைத்த லாபத்தை ஊழியர்
களுடன் பகிர்ந்துகொள்ள முனையும் நிறுவனங்களுக்கும் ஆதரவு வழங்கும் நோக்கில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் இந்த வருமான உதவித்தொகை திட்டமும் ஒன்று. மத்திய சேமநிதி பங்களிப்பு களைப் பெறும் சிங்கப்பூர் குடி
யுரிமை பெற்ற ஊழியர்கள் இந்த வருமான உதவித்தொகை திட்டத்துக்குத் தகுதி பெறுகின்றனர். முழுநேர, பகுதிநேர, மணிநேர அடிப்படையில் வேலை செய்யும் சிங்கப்பூர் ஊழியர்களும் இதில் அடங்குவர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது இதுவரை 2 பில்லியன் வெளிக்கும் அதிகமான வருமான உதவித்தொகை வழங்கீடுகள் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 98,000க்கும் அதிகமான முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட $940 மில்லியன் வருமான உதவித்தொகை வழங்கீடுகளும் இதில் அடங்கும்.
2019ஆம் ஆண்டு சம்பள உயர்வுக்காக கடந்த ஆண்டு 95,000க்கும் அதிகமான முதலாளிகளுக்கு ஒரு பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான வருமான உதவித்தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வருடாந்திர வழங்கீட்டுத் தொகைக்கு மேலாக ஜூன் மாதத்தில் கூடுதல் வழங்கீடு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான வழங்கீட்டுத் தொகையைப் பெற இவ்வாண்டிலும் கடந்த ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வுகள் தகுதி பெறும். அடுத்த மார்ச் மாதம் வழங்கப்படும் வழங்கீட்டுத் தொகைக்குத் தகுதி பெற மொத்த மாதச் சம்பளமாக $5,000 வரை ஈட்டும் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இவ்வாண்டில் குறைந்தது $50 சம்பள உயர்வை முதலாளிகள் கொடுத்திருக்க வேண்டும்.
அத்துடன்/அல்லது 2019ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் அல்லது இவ்விரு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தது $50 சம்பள உயர்வு வழங்கியிருக்க வேண்டும். பேநவ் கார்ப்பரேட் அல்லது ஜைரோ முறைப்படி முதலாளிகள் பதிவு செய்துள்ள வங்கிக் கணக்கில் வழங்கீட்டுத் தொகை அடுத்த மார்ச் மாதம் போடப்படும். பேநவ் கார்ப்பரேட் கணக்கை அல்லது ஜைரோ கணக்கை இன்னும் பதிவு செய்யாத முதலாளிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பதிவு செய்துவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அப்போதுதான் அடுத்த மார்ச் மாதத்தில் அவர்களுக்கு வழங்கீட்டுத் தொகை கிடைக்கும். சம்ப உயர்வுக்கு ஆதரவு வழங்கும் வருமான உதவித்தொகைத் திட்டம் 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் மூன்றாண்டுத் திட்டமாக அது அறிவிக்கப்பட்டது. பிறகு கடந்த ஆண்டு வரை அது நீட்டிக்கப்பட்டது.

