சாங்கி விமான நிலைய ஊழியருக்கு ஓமிக்ரான்

சாங்கி விமான நிலைய ஊழியருக்கு ஓமிக்ரான்

2 mins read
98f64b6f-cb7a-4a77-a2ca-c0c5f2e702b5
-

சமூக அள­வில் மேலும் ஒரு சிங்­கப்­பூ­ர­ருக்கு ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஆரம்­பகட்ட பரி­சோ­த­னை­தெரி­வித்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்­ட­வர் சாங்கி விமான நிலை­யத்­தின் மூன்­றா­வது முனை­யத்­தில் பணி­பு­ரி­யும் ஊழி­யர். பய­ணி­க­ளு­டன் அவர் தொடர்­பில் இருக்­க­வில்லை என்று அமைச்சு கூறி­யது.

அந்த 42 வயது ஆட­வர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இம்­மா­தம் 8ஆம் தேதி­யன்று அவ­ருக்­குக் காய்ச்­சல் ஏற்­பட்­டது.

தனி­யார் மருத்­து­வரை அவர் நாடி, பரி­சோ­தனை செய்­து­கொண்­டதை அடுத்து, அவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து அவர் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் திட்­டத்­தில் வைக்­கப்­பட்­டார்.

அதன் பிறகு, ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரு­டன் அவர் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தா­கக் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டது. இத­னைத் தொடர்ந்து மீண்­டும் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் அவ­ருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஆரம்­பகட்ட முடி­வு­கள் தெரி­வித்­துள்­ளன.

பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ருக்கு இலே­சான அறி­கு­றி­கள் மட்­டுமே இருப்­ப­தா­க­வும் அவர் தற்­போது தேசிய தொற்­று­நோய் எதிர்ப்பு நிலை­யத்­தில் தனி அறை­யில் வைக்­கப்­பட்டு குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை சிங்­கப்­பூ­ரில் 24 பேருக்கு ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 21 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள். எஞ்­சிய மூவ­ருக்­கு சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

"ஓமிக்­ரான் கிருமி வகை மிக வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது. அது பல நாடு­க­ளுக்­குப் பரவி உள்­ளது. எனவே, நமது எல்­லை­க­ளி­லும் சமூக அள­வி­லும் மேலும் பலர் ஓம்­கி­ரான் கிருமி வகை­யால் பாதிப்­ப­டை­யக்­கூ­டும்," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் மேலும் 355 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அந்­நோய் கார­ண­மாக மேலும் இரு­வர் மாண்டு­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை 808 பேர் கொவிட்-19 கார­ண­மாக மாண்­டு­விட்­ட­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 274,972ஆக அதி­

க­ரித்­துள்­ளது.