வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்புறுதி பாதுகாப்பு பரிசீலனை

வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்புறுதி பாதுகாப்பு பரிசீலனை

2 mins read
eb3d6ffe-ae6f-45de-af26-31ad7eabd621
-

இல்­லப் பணிப்­பெண்­கள் உட்­பட சிங்­கப்­பூ­ரின் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு அவர்­க­ளின் மருத்­து­வக் காப்­பு­று­தித் திட்­டம் வழங்­கும் பாது­காப்பு, தற்­போது சட்­ட­ரீ­தி­யாக நடை­மு­றை­யில் இருப்­ப­தைக் காட்டி­லும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்­கக்­கூடும்.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குக் கிடைக்­கும் மருத்­து­வக் காப்­பு­று­திப் பாது­காப்பை மறு­ஆய்வு செய்­து­வ­ரும் மனி­த­வள அமைச்சு, வரு­டாந்­திர கோரிக்­கைத் தொகை வரம்­பான $15,000ஐ $60,000 அல்­லது $100,000ஆக உயர்த்­து­வ­தைப் பரி­சீ­லித்து வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆவ­ணங்­கள் மூலம் கண்­ட­றிந்­துள்­ளது.

சந்தா தொகை­யைக் கட்­டுப்­படி­யாக வைத்­தி­ருக்க, காப்­பு­றுதி நிறு­வ­னங்­களும் முத­லா­ளி­களும் கோரிக்­கைத் தொகையை பகிர்ந்து­கொள்­ளச் செய்­வது குறித்து அமைச்சு ஆராய்ந்து வரு­கிறது.

இதன்­படி, முதல் $15,000ஐ காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­லாம். எஞ்­சிய தொகை­யைக் காப்­பு­றுதி நிறு­வ­னங்­களும் முத­லா­ளி­களும் 65%-35% அல்­லது 75%-25% என்ற விகி­தத்­தின் பிரித்து ஏற்­றுக்­கொள்­ள­லாம்.

கட்­ட­ணங்­க­ளைக் குறைக்க, 50 வய­துக்கு மேற்­பட்ட ஊழி­யர்­கள் தொடர்­பில் வெவ்­வேறு சந்தா தொகை­யை­யும் அமைச்சு பரி­சீ­லிக்­கிறது. முத­லா­ளி­கள் முத­லில் கட்­டணம் செலுத்­தி­விட்டு தொகை கோரு­வ­தற்­குப் பதி­லாக மருத்­து­வக் கட்­ட­ணங்­கள் தொடர்­பில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பை வழங்­கும் நிறு­வனங்­க­ளு­டன் காப்­பு­றுதி நிறு­வனங்­கள் நேர­டி­யாக அணு­கு­வது குறித்து விதி­கள் மற்­றும் நிபந்­த­னை­கள் தொகுப்பு ஒன்றை வகுப்­ப­தை­யும் அமைச்சு ஆராய்ந்து வரு­கிறது.

முத­லா­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள், காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள், அர­சாங்­கம் சாரா அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றி­ட­மி­ருந்து தனது மறு­ஆய்­வுக்­காக ஆலோ­சனை பெற்­று­வ­ரு­வ­தாக அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான மருத்­து­வப் பரா­ம­ரிப்பை மேம்­ப­டுத்­து­வதே இலக்கு. அதே­வே­ளை­யில் ஊழி­யர்­களுக்கு மருத்­து­வச் செலவு­கள் எதிர்­பா­ராது அதி­க­ள­வில் ஏற்­பட்­டால் முத­லா­ளி­க­ளுக்­குக் கூடு­தல் நிதி பாது­காப்­பை­யும் வழங்க வேண்­டும் என்று அமைச்சு திட்­ட­மி­டு­கிறது.