(1ஆம் பக்கச் செய்தியின் தொடர்ச்சி) பலருக்கும் பக்கபலமாக இருந்த நட்டேஷ்

2 mins read
7e6126ff-c4c6-4834-892b-9b3c155b36c4
-

மற்ற மாண­வர்­க­ளுக்கு எந்­நே­ர­மும் தோள் கொடுக்­கும் இயல்­புடைய நட்­டே­ஷைப் பாராட்டி அவ­ரது பள்ளி பல விரு­து­களை வழங்கி­உள்­ளது. சிறப்பு மதிப்­பெண்­கள் பெறும் அதே நேரத்­தில் காற்­பந்து வீர­ரா­க­வும் தேசிய மாண­வர் படை­யில் 'மூன்­றா­வது சார்­ஜண்ட்' அதி­கா­ரி­யா­க­வும் உள்ள நட்­டேஷ், நண்­பர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் இடையே பிர­ப­ல­மாக இருந்­தும் கர்­வம் கொள்­ளா­மல் பிற மாண­வர்­கள் அணு­கும்­ப­டி­யான எளி­மை­யான குணம் படைத்­த­வர் என்று இவ­ரின் வகுப்­பா­சி­ரி­யர் திரு­வாட்டி தன்யா கூறி­னார்.

"நல்ல பழக்­கங்­க­ளு­டைய மாண­வர்­கள் வெற்றி பெறு­வர் என்­ப­தற்கு நட்­டேஷ் ஒரு முன்­னு­தா­ர­ணம். வீட்­டுப்­பா­டங்­களை நேரத்­து­டன் செய்­வது முதல் வகுப்­ப­றை­யைச் சுத்­தம் செய்­வ­து­வரை எல்லா வேலை­களை­யும் பொறுப்­பாக அவர் செய்­வ­தால் பிற்­கா­லத்­தில் ஓர் உன்­னத நிலையை அடை­வது திண்­ணம் என நான் கரு­து­கி­றேன்," என்று அவர் கூறி­னார். தாயா­ரு­டன் தாத்தா பாட்­டி­யும் தன்னை வளர்த்து வந்­த­தா­கக் கூறிய நட்­டேஷ், கடந்­தாண்டு ஏப்­ரல் மாதம் அந்­தத் தாத்தா இறந்­த­போது மன­மு­டைந்து போன­தா­கத் தெரி­வித்­தார்.

"அந்­நே­ரத்­தில் கொவிட்-19 தொடர்­பான பல்­வேறு அதி­ரடி மாற்­றங்­களும் பள்­ளி­யில் நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டன. தடு­மா­றா­மல் அனைத்­தை­யும் சமா­ளிப்­பது அப்­போது சிர­ம­மாக இருந்­தது," என்று அவர் கூறி­னார்.

இத்­த­ரு­ணத்­தில் குடும்­பத்­தி­னர் மட்­டு­மின்றி நண்­பர்­களும் நட்டேஷுக்கு உற்­சா­கம் ஊட்­டி­னர்.

காற்­பந்து, கேளிக்கை நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றில் நண்­பர்­களு­டன் அவர் ஈடு­பட்­ட­போ­தும் தமது கவ­னத்தை அந்த நண்­பர் கூட்­டம் சித­ற­டிக்­க­வில்லை என்­றார் நட்­டேஷ். நட்­டேஷ் அன்­பா­ன­வர், கட்­டொ­ழுங்கு மிக்­க­வர், மரி­யாதை அறிந்­த­வர் என்று பாராட்­டிப் பேசி­னார் அவ­ரின் தம்பி கவி­னேஷ் ரூபன், 14.

"வழக்­க­நிலை (ஏட்­டுக்­கல்வி) மாண­வ­ரான என் அண்­ணன், கணி­தப் பாடத்­தில் எனக்கு வழி­காட்­டி­ய­தால் நான் விரை­வு­நி­லைக்கு முன்­னேறி இருக்­கி­றேன்," என்று அவர் கூறி­னார். குடும்­பப் பொறுப்பு­க­ளால் சில நேரங்­களில் தாம் துவண்டு போகும்­போது நட்­டேஷ் தமக்­குப் பக்­க­ப­ல­மாக இருப்­ப­தாக அவ­ரின் தாயார் ரேவதி இளங்­கோ­வன், 39, கூறி­னார்.

'பிஎ­ஃப்பி' எனப்­படும் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரித் திட்­டத்­தின் மூல­மாக தெமா­சிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இணை­யப் பாது­காப்பு, மின்­னி­லக்­கத் தட­ய­வி­யல் துறை­யில் பயில்­வ­தற்­கான இடத்­தைப் பெற்­றுள்­ளார் நட்­டேஷ்.

தமது கல்­விப் பாதை­யின் அடுத்த கட்­டத்­திற்­குச் செல்ல ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

மாண­வர்­கள் தங்­க­ளுக்கு விருப்­ப­மா­ன­தைச் செய்­வ­து­டன் எந்­நே­ர­மும் தன்­னம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­ட­வேண்­டும் என்று நட்­டேஷ் கேட்­டுக்­கொண்­டார்.

படங்­கள்: திமத்தி டேவிட்