வணிகப் பதிவேடுகளில் தனிநபர்களுக்கான கூடுதல் தரவு தனியுரிமை
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் (அக்ரா) முன்மொழியப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், தொழிலில் ஈடுபட்டுள்ள, அனைத்து தனிநபர்களின் முழு அடையாள அட்டை எண்கள், அவர்களின் குடியிருப்பு முகவரிகள் ஆகியவை இனி பொதுமக்களுக்குக் கிடைக்காது.
தற்போது இதுபோன்ற தகவல்கள் அக்ராவின் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களின் பதிவேடுகளில் காணப்படுகின்றன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பெருநிறுவன வெளிப்படைத்தன்மை, தனிப்பட்ட தரவு தனியுரிமை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அக்ரா கூறியது
பதிவேடுகளில் உள்ளவர்களின் அடையாள எண்களையும் ஓரளவு மறைக்கவும், பொதுமக்களுக்குக் காண்பிக்கப்படும் அவர்களின் செயல்பாட்டு முகவரியாக "தொடர்பு முகவரியை" அறிமுகப்படுத்தவும் இது முன்மொழிகிறது.
பிற முன்மொழியப்பட்ட மாற்றங்கள் தரவு துல்லியம், தாக்கல் செய்யும் வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பிட்ட அரசாங்க அமைப்புகளிடமிருந்து தரவைப் பெறுவதற்கு அக்ராவுக்கு அதிகாரம் அளிக் கின்றன. தற்போது முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நம்பகமான, துடிப்பான வர்த்தகச் சூழலை வளர்ப்பதற்கான அதன் சட்டங்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய பொதுமக்களின் கருத்தை நாடுவ தாக அக்ரா கூறியது.
அதன் மின்னிலக்கமயமாதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறு வனத்தில் உள்ளவர்கள், பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள், கைபேசி எண்களை வழங்க வேண்டும். மேலும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வர்த்தக மின்னஞ்சல் முகவரிகளை வழங்க வேண்டும். அக்ராவின் பிற முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அழைப்பாணைகளை வழங்குவதற்கான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன மற்றும்் அழைப்பாணைக்கு இணங்குவதை எளிதாக்குகின்றன.
acra_public_consultation@acra.gov.sg எனும் அக்ராவின் இணையத்தளத்திலும், www.reach.gov.sg எனும் அரசாங்க கருத்தறியும் பிரிவின் இணையத் தளத்திலும் பொதுமக்கள் பரிந்துரைத் தொகுப்பைப் பெறுவதுடன், தங்கள் கருத்துகளையும் பதிவுசெய்யலாம்.

