சாங்கி விமான நிலையத்தில் $20 ஆயிரத்திற்கும் அதிகமான பணத்தை அறிவிக்கத் தவறிய 23 பயணிகள் பிடிபட்டனர்

2 mins read
25238dd3-cb68-410e-bf9e-b2aa92500463
-

மொத்­தம் $31,023 மதிப்­புள்ள சிங்­கப்­பூர் மற்­றும் வெளி­நாட்டு நாண­யங்­களை வைத்­தி­ருந்த 46 வயது வெளி­நாட்­ட­வர் ஒரு­வர் கடந்த புதன்­கி­ழமை சிக்­கி­னார்.

அன்­றைய தினம் சாங்கி விமான நிலை­யத்­திற்கு வந்த 23 பய­ணி­களில் அவ­ரும் ஒரு­வர். மேலும் $20,000க்கும் அதி­க­மான பணத்தை அறி­விக்­கத் தவ­றி­ய­தற்­காக அல்­லது சிக­ரெட், மது­பா­னம், பிற பொருட்­க­ளுக்கு வரி செலுத்­தத் தவ­றி­ய­தற்­காக மற்­ற­வர்­கள் பிடி­பட்­ட­னர்.

காவல்­துறை, குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம், சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை ஆகி­யவை நேற்று முனை­யம் 1, 3 ஆகி­ய­வற்­றில் நடத்­திய ஏழு மணி­நேர நட­வ­டிக்­கை­யைத் தொடர்ந்து பய­ணி­கள் பிடி­பட்­ட­தா­கத் தெரி­வித்­தன.

பய­ணக் கட்­டுப்­பா­டு­களை தளர்த்­து­வ­தன் மூலம் மேலும் நட­வடிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக அந்த அமைப்­பு­கள் மேலும் தெரி­வித்­தன.

"கடத்­தல் நட­வ­டிக்­கை­கள் மற்­றும் எங்­கள் விதி­மு­றை­க­ளுக்கு இணங்­கா­தது உள்­ளிட்ட குற்­றங்­கள், பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­களுக்கு எதி­ராக எங்­கள் நிலம், வான், கடல் எல்­லை­க­ளைப் பாது­காக்க நாங்­கள் முயற்சி செய்வதால், எந்­த­வொரு சட்­ட­வி­ரோ­தச் செயல்­களை­யும் அதி­கா­ரி­கள் பொறுத்­துக்­கொள்ளமாட்­டார்­கள் என்­பதை அனைத்து பய­ணி­க­ளுக்­கும் நினைவு­ப­டுத்­து­கி­றோம்," என்று அந்த அமைப்­பு­கள் தெரி­வித்­தன.

கைது செய்­யப்­பட்ட 23 பய­ணி­களில் 57 வயது வெளி­நாட்­ட­வர் ஒரு­வ­ரும் அடங்­கு­வார். அவர் தன்னிடம் வைத்திருந்த $25,000 மதிப்­புள்ள சிங்­கப்­பூர், வெளி­நாட்டு நாண­யங்­களை அறி­விக்­கத் தவறி­விட்­டார்.

மேலும் 21 பேர், வரி­யில்லா சலு­கை­யைத் தாண்டி செலுத்த வேண்­டிய வரி செலுத்­தப்­ப­டாத சிக­ரெட் அல்­லது புகை­யிலைப் பொருட்­கள், மது­பா­னங்­களை வைத்­தி­ருந்­த­னர்.

பய­ணி­கள் அல்­லது சிங்­கப்­பூர் திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள், Customs@SG எனும் இணையத் தளத்­தில் அவர்­கள் இங்கு வரு­வ­தற்கு மூன்று நாள்க­ளுக்கு முன்பு வரை வரி அல்­லது பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தப்பட வேண் டிய பொருட்­க­ளுக்­கான முன் அறி­விப்பு மற்­றும் பணம் செலுத்த ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றார்­கள்.