சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் விபத்து, அவசரநிலை சிகிச்சைக் கட்டணம் உயர்வு

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் விபத்து, அவசரநிலை சிகிச்சைக் கட்டணம் உயர்வு

2 mins read
344ead2f-9c0d-43dc-be36-1190f0984df2
-

இங்­குள்ள பெரும்­பா­லான பொது மருத்­து­வ­ம­னை­கள், அதி­க­ரித்து வரும் செல­வி­னங்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கான கால மறு­ஆய்­வின் ஒரு பகு­தி­யாக, இந்த ஆண்டு தங்­கள் விபத்து, அவ­ச­ர­நிலை சிகிச்­சை­க­ளுக்­கான கட்­ட­ணத்தை உயர்த்­தி­யுள்­ளன.

விபத்து, அவ­ச­ர­நிலை வரு­கைக்­கான கட்­ட­ணம் இப்­போது $116 முதல் $132 வரை இருக்­கும். இவ்­வாண்டு ஏப்­ரல் மாத இறு­தி­யில் மருத்­து­வ­ம­னை­கள் கட்­ட­ணங்­களை உயர்த்­தத் தொடங்­கும் முன் அது $110 முதல் $126 வரை இருந்­தது.மருத்­து­வ­ரின் ஆலோ­சனை, தாதி­மைப் பரா­ம­ரிப்பு, சிகிச்சை ஆகி­ய­வற்­றுக்­கான கட்­ட­ணம் இது.

இதில் சிறு­நீர் அல்­லது ரத்த சர்க்­கரை பரி­சோ­த­னை­கள், பிளாஸ்­டிக் வார்ப்பு, காயத்­துக்­கான எளிய தையல், காயத்­திற்­குக் கட்­டுப்­போடு­தல் போன்ற அடிப்­படை நடை­முறை­கள் மற்­றும் வழக்­க­மான மருந்­து­கள் போன்­றவை இதில் அடங்­கும்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை, தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை, செங்­காங் பொது மருத்­து­வ­மனை ஆகி­யவை கடந்த ஆண்டு விபத்து, அவ­ச­ர­நிலை சேவை­க­ளுக்கு $121 வசூ­லித்­த­தா­க­வும் கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை கட்­ட­ணம் $122 வசூ­லித்­த­தா­க­வும் அவற்­றின் இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த நான்கு மருத்­து­வ­ம­னை­களும் இப்­போது விபத்து, அவ­ச­ர­நிலை சேவை­க­ளுக்கு $128 வசூ­லிக்­கின்றன.

சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் விபத்து, அவ­ச­ர­நிலை வரு­கைக்கு இப்­போது $132 செல­வா­கும். இது முன்பு $126 ஆக இருந்தது.

இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­மனை, கேகே மக­ளிர் மற்­றும் சிறார் மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றில் விபத்து, அவ­ச­ர­நிலை கட்­ட­ணம் கடந்த ஆண்டு $120 ஆக இருந்­தது, தற்­போது $127 ஆக உள்­ளது. டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் கட்­ட­ணம் மட்­டும் 2019 முதல் $128 ஆக மாறா­மல் உள்­ளது.

அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­மனை­யில், நோயா­ளி­கள் இப்­போது அவ­ச­ர­நிலை சேவை­க­ளுக்கு $116 செலுத்­து­கின்­ற­னர். இது முன்பு $110 ஆக இருந்­தது. அதன் 24/7 நேரடி அவ­சர பரா­ம­ரிப்பு மையம் மருத்­துவ அவ­ச­ர­நி­லை­க­ளைக் கையா­ளு­கிறது.

ஆனால் மார­டைப்பு அல்­லது கடு­மை­யான பக்­க­வா­தம் போன்ற பிரச்சினைகளுடன் வருபவர்களை இந்த மையம் ஏற்றுக்கொள்ளாது.

படுக்­கை­கள், மருத்துவ ஆலோ­ச­னை­கள் போன்ற பிற விஷ­யங்­களுக்­கான கட்­ட­ணத்தையும் பொது மருத்­து­வ­ம­னை­கள் உயர்த்­தின.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை, டெங் ஃபோங் பொது மருத்­து­வ­மனை, அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­மனை­, ஜூரோங் மருத்­துவ மையம் ஆகியவற்றில் ஏப்­ரல் 28 அன்று வார்டு கட்­ட­ணங்­கள், சிறப்பு வெளி­நோ­யா­ளி மருந்த கங்கள், அவ­சர சிகிச்­சைப் பிரிவு ஆகி­ய­வற்­றில் சிறிய அளவில் கட்­டண சரி­செய்­தலை மேற்கொண்ட தாக தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தாரக் குழுமத்தின் செய்­தித் தொடர்­பாளர் கூறி­னார்.

சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி திரு சியா கெங் ஹாங், "எங்கள் மருத்துவ மனைகள் இந்த ஆண்டு வெவ்வேறு அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மானியம், தனியார் மருத்துவ சேவைகளுக்குக் கட்டண திருத்தங்களைச் செய்தன," என்று கூறினார்.

சிங்ஹெல்க் குழுமத்தின் கீழ் வரும் மருத்துவமனைகள் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை, சாங்கி பொது மருத்­து­வ­மனை, கேகே மக­ளிர் மற்­றும் சிறார் மருத்­து­வ­மனை செங்காங் பொது மருத்­து­வ­மனை ஆகும்.