முரசொலி
நிலவளம் அதிகம் இல்லாத சிங்கப்பூரில் வீடு என்பது அதன் மக்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டம் உலக அளவில் மிகவும் பிரபலமானது. அது வெற்றிகரமான ஒரு திட்டம்.
மக்கள்தொகையில் மிகவும் அதிக அளவிலான மக்கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள்.
சிங்கப்பூர் வீடுகள் தரமிக்கவைகவும் உலக அளவில் அவற்றின் விலை போட்டித்திறன் மிக்கதாகவும் இருந்துவருகின்றன. 2020 நிலவரப்படி 1.37 மில்லியன் குடிமக்கள், நிரந்தரவாசி குடும்பங்கள் வசிப்பதாக புள்ளிவிவரத்துறை தெரிவிக்கிறது.
இந்த அளவு, 2010ஆம் ஆண்டில் 1.15 மில்லியனாக இருந்தது. கூட்டுரிமை அடுக்கு வீடுகளிலும் இதர அடுக்குமாடி வீடுகளிலும் வசிக்கும் குடும்பங்கள் விகிதாச்சாரம் 11.5%லிருந்து 16% ஆகக் கூடி இருக்கிறது. இருந்தாலும் பெரும்பாலான குடும்பங்கள்- அதாவது 78.7% குடும்பங்கள், ஐந்தில் நான்கு குடும்பங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கின்றன. இந்த அளவு பத்து ஆண்டுகளுக்கு முன் 82.4% ஆக இருந்தது.
மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் வசிக்கிறார்கள். சிங்கப்பூரின் சொத்துச் சந்தை நிலைகவும் கட்டிக்காக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கவேண்டும் என்பதே அடிப்படை கொள்கை.
சிங்கப்பூரர்களுக்கு வீடுகள் எப்போதுமே எட்டக்கூடிய நிலையில் இருக்க வேண்டும், அவை எட்டாக் கனிக ஆகிவிடக்கூடாது என்பதை அரசாங்கம் எப்போதும் உறுதி செய்து வருகிறது.
ஆனால், கொவிட்-19 காரணமாக பொருளியல் கணிசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் கூட, இங்கு தனிர் குடியிருப்பு மற்றும் வீவக மறுவிற்பனைச் சந்தை தொடர்ந்து மிகவும் பரபரப்பாக இருந்து வருவது வியப்பளிக்கிறது.
இப்போதைய நிலவரப்படி பார்த்தால், சொத்துச் சந்தைக்கும் பெரிய அளவிலான பொருளியல் நிலவரங்களுக்கும் இடையில் ஒத்த தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த இடைவெளியை அதிகரிக்க விட்டுவிட்டால் பொருளியல் அடிப்படைகளுக்கு ஒத்துவராத அளவுக்கு வீடுகளின் விலைகள் கூடிவிடக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுவிடும். இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைச் சமாளிக்க வேண்டிய பெரும் சுமை வரும் காலத்தில் ஏற்பட்டுவிடும்.
வீட்டு விலை தொடர்ந்து கூடுவதால், வீடுகளை வாங்குவதில் பொதுமக்களும் நாட்டம் காட்டுவதால் வட்டி விகிதம் உயர்வதற்கு இடமுண்டு. இது ஏற்கெனவே கண்கூடான ஒன்றாகிவிட்டது.
இதனால் கடன் வாங்கி வீட்டை வாங்குவோர் கடனை அடைக்க மேலும் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கலாம். இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தனிர் மற்றும் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை ஏற்றத்தை மிதப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை இப்போது நடப்புக்குகொண்டு வந்து உள்ளது.
மொத்தமாகப் பார்க்கையில், அந்த நடவடிக்கைகளின் விளைவாக வீடுகளுக்கான பரந்த அளவிலான தேவை மட்டுப்படும் என எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக, குடியிருப்பதற்குப் பதிலாக முதலீட்டுக்காக சொத்து வாங்குவோர் ஒருமுறைக்கு இரு முறை யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
இது ஒருபுறம் இருக்க, தனிர் மற்றும் அரசாங்க வீடுகள் தொடர்பான நிதி நிலவரங்களையும் கடுமைக்குவதற்கான நடவடிக்கைகளின் விளை வாக மக்கள் விவேகமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தனிர், பொது மறுவிற்பனை வீடுகளின் விலைதாறுமாறாக ஏறுவதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அமல்படுத்தும் அதேவேளையில், புதிய தனிர், அரசாங்க வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் வழிவகைகளைச் செய்கிறது. கூடுமான வரை ஆக அதிக மக்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளை ஒட்டி அரசாங்கம் வீவக மூலம் தரமிக்க வீடுகளை மானிய விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது.
அதேவேளையில், மக்களின் எதிர்பார்ப்பு, வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனிர் வீடுகளையும் அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. இதுவே வழிவழின அரசாங்கக் கொள்கைக இருந்து வருகிறது.
இருந்தாலும், மறுவிற்பனை சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இப்போது எடுக்கும் நடவடிக்கைகளை, வீடுகளை கட்டி விற்கும் நிறு வனங்களும் இதர நிறுவனங்களும் ஏமாற்றத்துடன்தான் பார்க்கும் என்பதில் வியப்பு ஏதும் இருக்காது.
வீடுகளை வாங்குவோர் அதிக முத்திரை வரிகளைச் செலுத்த வேண்டி இருக்கும். கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளும் அதிகரிக்கும்.
இதனால் அவர்களுக்கான பொருளியல் வாய்ப்புகள் குறையும் என்பதை இத்தகைய நிறுவனங்கள் எண்ணிப் பார்க்கும் என்பதிலும் வியப்பு இருக்காது.
புதிய பொது மற்றும் தனிர் வீடுகளும் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து சந்தைக்கு வரும் என்பதால் சந்தையில் வீடுகள் எந்த அளவுக்குத் தேவைப்படும் என்பதற்கும் எந்த அளவிற்கு வீடுகள் கிடைக்கும் என்பதற்கும் இடைப்பட்ட கணக்கீட்டில் மாற்றம் இடம்பெற வாய்ப்பு உண்டு.
இத்தகைய ஒரு சூழ்நிலை வீட்டின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்காற்றும்.
சிங்கப்பூரில் வீட்டின் விலை கூடி வருவதற்கு வெளிநாட்டினரும் முக்கிய காரணம். சொத்துச் சந்தையில் வீடு வாங்க முதன்முதலாக வருவோரைவிட அத்தகைய வெளிநாட்டினரும் மற்றவர்களும் பணபலம் மிக்கவர்களாக இருக்கலாம்.
ஆகையால், சந்தைக்குப் புதியவர்களைப் பாதுகாப்பதற்கு இப்போதைய புதிய நடவடிக்கைகள் உதவும் என்று எதிர்பார்க்கவும் இடமுண்டு.
விரும்பும் ஒரு வீடு கைக்கு வரவேண்டுமானால் அதை வாங்குவதற்கான வளம் ஒருவரிடம் இருக்கவேண்டும். அந்த வளம், சிங்கப்பூரர்களின் பொருள் ஈட்டும் ஆற்றலை அடிப்படைகக் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அரசாங்கம் இதற்கு முன்பும் சொத்துச் சந்தையை மெதுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை வருங்காலத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டிய வாய்ப்புகளும் உண்டு.
கொவிட்-19 பொருளியல் பாதிப்புகளில் இருந்து சிங்கப்பூரர்கள் மீண்டுவரும் ஒரு நேரத்தில், அத்தகைய நடவடிக்கைகள் தனியார் மற்றும் பொது வீடு மறுவிற்பனை விலை கைமீறிப்போகாமல் காக் கும் கடிவாளமாக இருக்கும். தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக, விவேகமிக்கதாகவே, அவசியமானதாக அவை இருந்து வரும்.

