சிங்கப்பூரில் 2022 தைப்பூசத் திருவிழா ஜனவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கொவிட்-19 தொற்று சூழலில் இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் நடை ஊர்வலம் செல்லவும் காவடி எடுக்கவும் அனுமதி இருக்காது. முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலும் விழாவிலும் அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் பால்குட வேண்டு தலை நிறைவேற்றலாம். அதுவும், கோயிலில் முன்னரே தயார்செய்து வைக்கப்பட்டுள்ள பால்குடங்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பால்குடம் எடுத்து காணிக்கை செலுத்த விரும்புவோர், டிசம்பர் 22ஆம் தேதி முதல் இணையம் வழி முன்பதிவு செய்யலாம் என்று இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றுடன் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் தெரி வித்தது. மொட்டை போட விரும்பு வோர் டிசம்பர் 29ஆம் தேதியன்று https://sttemple.com இணையத்தளத்தில் பதியலாம்.
பாதுகாப்பை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பால்குட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படு வர். முன்பதிவு செய்தோர் மட்டும் அதற்கான சான்றுடன் கோயிலுக் குள் அனுமதிக்கப்படுவர்.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்குச் சென்று, இறைவனைத் தரிசிக்க விரும்பும் இதர பக்தர்கள் அதற்கான நேரத்தை இணையம் வழியாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
முன்பதிவு இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவிலுக்கு வெளியே பக்தர்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே அவர்கள் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு முற்றிலும் உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்கள் தைப்பூசத் திருவிழா நெருங்கும் வேளையில் வெளியிடப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.

