உலக அளவில் மிகவும் பிரபலமான சிட்டிபேங்க், சிங்கப்பூரில் பிறந்தவரான திரு மணி கே-யை தனது உலக வாடிக்கையாளர் சேவைத் துறையின் உலகத் தலைவர் பதவியில் நியமித்துள்ளது. சிங்கப்பூரர் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
திரு மணி, சிங்கப்பூரில் தங்கி இருந்தபடி உலகம் முழுவதும் செயல்படும் வங்கியின் வட்டார தலைமைத்துவ குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றுவார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிட்டி பிரைவேட் பேங்கின் உலகத் தலைவரான திருவாட்டி இடா லியூவின் கீழ் திரு மணி பணியாற்றுவார்.
திரு மணி சிட்டிபேங்க் வங்கியில் 20 ஆண்டுகளுக்கும் அதிக கால அனுபவம் வாய்ந்தவர். அந்த வங்கியின் நிறுவன விவகாரங்களில் 1999ல் பணியைத் தொடங்கிய இவர், 2003ல் அந்த வங்கியின் சந்தைத் துறையில் மூத்த பதவியை மேற்கொண்டார்.
திரு மணி, அதற்கு முன் செய்தித்துறையிலும் பொது உறவு துறை ஆலோசகராகவும் இருந்தார்.