சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அவர்களையும் சேர்த்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 275,384 ஆகியது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 371 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆறு பேர் வெளி நாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள். 35 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இப்போது மொத்தம் 481 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் 33 பேர் இருக்கிறார்கள்.
இந்தப் பிரிவின் ஒட்டுமொத்த பயனீட்டு விகிதம் 46.4% ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் ஒருவர் மாண்டதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 809 ஆகக்கூடி உள்ளது என்றும் அமைச்சு தெரிவித்தது.
வாராந்திர தொற்று விகிதம் 0.63% ஆக இருந்தது.

