தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைதிகள் மறுவாழ்வுக்கு கைகொடுத்த தொண்டு

2 mins read
29f1358c-1116-42ff-8744-88b0b64d3ad3
-

சிறைக்­கை­தி­கள், முன்­னாள் கைதி­கள் மற்­றும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரின் வாழ்க்­கையில் ஒளியேற்ற உதவியதற்காக 266 சிங்­கப்­பூர் சிறைத்துறைத் தொண்­டூ­ழி­யர்­

க­ளுக்கு நீண்­ட­கா­லச் சேவை விருது வழங்­கி கௌர­விக்­கப்­பட்­டது.

மெய்­நி­கர் வடி­வில் நடை­பெற்ற விருது வழங்கும் நிகழ்ச்­சி­யில் உள்­துறை மற்றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் ஆற்­றிய உரை ஒலி­ப­ரப்­பப்­பட்­டது.

சிறைச்­சா­லை­யின் தொண்­டூ­ழி­யக் கட்­ட­மைப்பு விரி­வ­டைந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், 2000ஆம் ஆண்­டில் 200 தொண்­டூ­ழி­யர்­கள் மட்­டுமே இருந்த நிலை­யில் தற்­போது அந்த எண்­ணிக்கை 2,400ஆக அதி­க­ரித்­து­விட்­டது என்­றார்.

சிறைக்­கை­தி­கள் மற்­றும் முன்­னாள் கைதி­க­ளின் மறு­ஒ­ருங்­

கிை­ணப்­புக்­கும் மறு­வாழ்­வுக்­கும் சமூக ஆத­ரவு அவ­சி­யம் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"முன்­னாள் கைதி­க­ளு­டன் ஏற்­

ப­டுத்­திக்­கொண்ட உற­வைத் தொட­ரு­வ­தன் மூலம் சமூ­கத்­தில் தொண்­டூ­ழி­யர்­கள் முக்­கிய பங்கு வகிக்­கி­றார்­கள்.

அத­னால்­தான் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான பின்­ன­ரும்­கூட அவர்­க­ளுக்கு தொண்­டூ­ழி­யர்­க­ளின் ஆத­ரவு கிடைக்­கிறது," என்­றார் திரு டான்.

நேற்­றைய விருது விழங்­கும் நிகழ்ச்­சி­யில் 23 சமூக சேவை அமைப்­பு­க­ளுக்­குப் பாராட்டு கேட­யங்­கள் வழங்­கப்­பட்­டன. வேறு­சில சமூக சேவை அமைப்­பு­க­ளுக்­கும் பல்­வேறு இதர அமைப்­பு­க­ளுக்­கும் பாராட்டுச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டது. கைதி­கள், முன்­னாள் கைதி­கள் ஆகி­யோ­ரின் மறு­வாழ்வு மற்­றும் மறு­ஒ­ருங்­கி­ணைப்பு நடை­

மு­றைக்கு உத­வி­நல்­கி­ய­தாக அவற்­றுக்கு அந்­தச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டது.

அவ்­வாறு பாராட்­டு­பெற்ற அமைப்­பு­க­ளுள் இரட்­சண்ய சேனை­யும் ஒன்று. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சிறைச்­சா­லை­க­ளு­டன் பங்­கா­ளித்­து­வம் ஏற்­ப­டுத்­திக்­கொண்டு குடும்­பத்தை மைய­மா­கக் கொண்ட திட்­டங்­க­ளுக்கு இந்த அமைப்பு ஆத­ரவு அளித்து வரு­வதை திரு டான் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

சிறைத்துறை தொண்டூழியர்கள், சமூக சேவை அமைப்புகளுக்கு விருது