ஒட்டுமொத்த விற்பனைச் சந்தை கடந்த 12 மாதங்களில் கொள்ளைநோய் சிரமங்களையும் தாண்டி சிறப்பான நிலையை எட்டியுள்ளது. ஆனால் இதே நிலை தொடரும் வாய்ப்பை புதிய சொத்துச் சந்தை சூடுதணிப்பு நடவடிக்கைகள் குறைக்ககூடும்.
ஒட்டுமொத்த விற்பனைச் சந்தைக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு என்று குறிப்பிடலாம். இவ்வாண்டில் இதுவரை $2.65 பில்லியன் பெறுமான பத்து தளங்கள் சொத்து மேம்பாட்டாளர்
களுக்கு விற்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நான்கு விற்பனைப் பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்தன. அவற்றின் மதிப்பு $127.3 மில்லியன். இந்த மாதத்தில் மட்டும் $1.2 பில்லியன் பெறுமான இரண்டு சொத்துகள் ஒட்டுமொத்த விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு முழுமைக்கும் நிறைவேற்றப்பட்ட விற்
பனைப் பரிவர்த்தனை மதிப்பில் இது கிட்டத்தட்ட சரிபாதி.
பலதரப்புப் பயன்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பீஸ் செண்டர்/பீஸ் மேன்சன் $650 மில்லியன் விற்பனையே ஆகப்பெரியது என்
பதோடு மட்டுமின்றி; வர்த்தகச் சொத்துகளின் வருங்காலத்தை இந்த விற்பனை பிரகாசமாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மவுண்ட் எலிசபெத்தில் உள்ள ஹை பாய்ண்ட் கொண்டோமினியத்தை இந்த மாதம் 9ஆம் தேதி ஹாங்காங்கின் ஷன் டேக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் $556.7 மில்லியனுக்கு வாங்கியது. இது சதுர அடிக்கு $2,537 என்ற கணக்கில் வரும்.
இதன்படி, 2018 ஜூலை மாதத்திற்குப் பிறகு பரிவர்த்தனை ஆகியுள்ள ஆக அதிக நிலச்சொத்து விலை இது.
ஒட்டுமொத்த விற்பனை நட
வடிக்கை இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்றபோதிலும் இதற்கான பொன்னான காலம் என்று கருதப்பட்ட 2018 பரிவர்த்தனைகளைக் காட்டிலும் குறைவே.
அந்த ஆண்டில் மட்டும் இந்தத் திட்டத்தின்கீழ் $10 பில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றன. அதற்கு முந்திய ஆண்டில் $8.1 பில்லியன் விற்பனை நடைபெற்றது.
கொள்ளைநோய் ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாக இவ்வாண்டு கட்டுமானச் செல்வுகள் உயர்ந்துவிட்டன.
மேலும், மத்திய வட்டாரத்திற்கு வெளியே இடம்பெறும் புதிய தனியார் அடுக்குவீட்டுத் திட்டங்களின் குறைந்தபட்ச வீட்டு அளவு 70 சதுர மீட்டரிலிருந்து 85 சதுர மீட்டருக்கு அதிகரித்திருப்பதும் விற்பனையில் இவ்வாண்டு தாக்கத்தை ஏற்படுத்தின. சில வட்டாரங்களில் இதன் அளவு 100 சதுர மீட்டராகவும் உள்ளது.
கஷ்மன் அண்ட் வேக்ஃபீல்ட் ஆய்வு நிறுவனத் தலைவர் வோங் சியன் யாங் கூறுகையில், "பல்வேறு ஒட்டுமொத்த விற்பனைத் திட்டங்கள் நம்பிக்கையுடன் தொடங்கப்படும் நிலையிலும் சொத்து மேம்பாட்டாளர்கள் நிலச் சொத்துகளை வாங்குவதில் கவனம் செலுத்துகின்றனர்.
"இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் விற்கப்படாத தனியார் வீடுகளின் எண்ணிக்கை 17,165க்குக் குறைந்தது. இரண்டாம் காலாண்டைக் காட்டிலும் இது 12 விழுக்காடு குறைவு.
"2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்கப்படாத சொத்துகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்ததைக் காட்டிலும் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அப்போது 37,799 தனியார் வீடுகள் விற்கப்படாமல் இருந்தன," என்றார்.
சொத்துச்சந்தை சூடுதணிப்பு புதிய நடவடிக்கைகளின் தாக்கம் இனி இருக்கலாம்

