சிங்கப்பூரில் உட்கட்டமைப்புகளையும் முக்கியமான நிகழ்வுகளையும் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட காவல்துறை சிறப்புப் படை ஒன்று தற்போது புதிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பாதுகாப்புக் காவல் படை (ப்ரோகாம்) இவ்வாண்டு பிப்ரவரியில் தொடங்கிய பாதுகாப்புக் காவல் ஈடுபாட்டுக் குழு (பிஎஸ்இஜி) பொது, தனியார் அமைப்புகளின் வளாகங்களில் பாதுகாப்பை மேம்
படுத்த அவற்றுடன் இணைந்து பணியாற்றும்.
அடுத்த ஆண்டுக்குள் இந்தக் கூட்டு முயற்சியில் சுமார் 200 அமைப்புகளை ஈடுபடுத்த இந்தப் புதிய குழு எண்ணம் கொண்டுள்ளது.
இந்த அமைப்புகளில் பொது அமைப்புகள் எத்தனை, தனியார் அமைப்புகள் எத்தனை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை முக்கியமான உள்கட்டமைப்புகள் அல்லது பெருங்கூட்டம் பங்கேற்கும் நிகழ்வுகளை நடத்துபவை எனத் தெரிய வந்துள்ளது.
பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவற்றை மதிப்பிடுதல், கூட்டாக சுற்றுக்காவலில் ஈடுபடுதல், பாதுகாப்பை மேம்படுத்த பாவனைப் பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்றவற்றை இந்த அமைப்புகளுக்கு பிஎஸ்இஜி வழங்கும்.
"இதுவரை, இந்த அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றுடன் பிஎஸ்இஜி இணைந்து பணியாற்றி உள்ளது. கரையோரப் பூந்தோட்டங்களுடன் தொடர்புடைய அமைப்புகள் சிலவும் அவற்றுள் அடங்கும்," என்று பாதுகாப்புக் காவல் படையின் (ப்ரோகாம்) உதவி ஆணையாளர் தேவ்ராஜன் பாலா ஊடகங்களிடம் கூறினார்.
புதிய தொழில்நுட்பக் கருவிகளும் பாதுகாப்புக்காகப் பயன்
படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், உணர்கருவி, இயந்திர மனிதன் போன்றவை தரைவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் என்றார்.
"காவல்துறைக்குத் தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஊக்குவிப்பு' அதிகாரிகள் இல்லாத நிலையிலும் கைகொடுக்கக்கூடியவை. வருங்காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த மேலும் அதிகமான நடவடிக்கைகள் இடம்பெறும் என்று நம்புகிறோம்.
"ஓரிடத்தின் உள்பகுதி பாதுகாப்பாக உள்ளதா என்பதையும் அங்கு நெருக்கடி ஏதேனும் இருப்பின் அதனைச் சமாளிக்கும் திட்டம் அங்கு உள்ளதா என்பதையும் கணிப்பது எங்கள் பணி.
"முழுக்க முழுக்க கண்காணிப்புப் படக்கருவியை (சிசிடிவி) மட்டும் நம்பமுடியாது. அவை போதுமானதாக இருக்காது. மறைவான சில பகுதிகள் விடுபட வாய்ப்பு உண்டு," என்றும் திரு தேவ்ராஜன் விளக்கினார்.
சைக்கிளோட்டிகளை வழிநடத்தும் புதிய கைபேசிச் செயலி
சைக்கிள் பாதைகளையும் பூங்கா இணைப்புகளையும் பயன்படுத்த விரும்புவோருக்கு புதிய கைபேசிச் செயலி கைகொடுக்கும். இந்த மாதத்தில் தொடங்கப்பட்ட The Ridenjoy என்னும் அந்த செயலி சிங்கப்பூர் நில ஆணை யத்தின் 'ஒன்மேப்' நிரல் முகப்புத்தோற்றத்தைக் கொண்டி ருக்கும். ஒன்மேப் சிங்கப்பூரின் அதிகாரத்துவ தேசிய வரை படம். இதனை சிங்கப்பூர் நில ஆணையம் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. கூகல் மேப் பரிந்துரைப்பதைக் காட்டிலும் நீளமான பாதைகளை தமது செயலி பரிந்துரைக்கும் என்று The Ridenjoy செயலியின் நிறுவனர் கெல்வின் ஃபாங், 50, கூறினார்.
"நீங்கள் சாலையில் பயணம் செய்பவராக இருந்தால் கூகல் மேப் பயன்படுத்துங்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் குறிப்பாக சிறுவர்கள் சாலைகளில் சைக்கிள் ஓட்டுவதை விரும்புவதில்லை," என்று அவர் கூறினார். சைக்கிள் நிறுத்து மிடம், சைக்கிள் பழுதுபார்ப்பு நிலையம் போன்ற தகவல்களை யும் The Ridenjoy செயலியில் காணலாம் என்றார் அவர்.

