முதல் நாள் மலேசியா பயணம்; சிங்கப்பூரர்கள் உற்சாகம்

முதல் நாள் மலேசியா பயணம்; சிங்கப்பூரர்கள் உற்சாகம்

2 mins read
e3005dc6-b49d-435b-9c48-6ccc5ea3f1ba
-

தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான தரை­ வ­ழிப் பய­ணத்­திற்கு சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் அனு­மதி வழங்­கி­யுள்­ளன. முதல் நாளான நேற்று சிங்கப்­ பூ­ரர்­கள் பலர் உற்­சா­கத்­து­டன் எல்­லை­யைக் கடந்து மலே­சி­யா­வுக்­குச் சென்­ற­னர்.

இவர்­களில் திரு­மதி பியாங் லீ சானும் ஒரு­வர். ஜோகூ­ரில் உள்ள குடும்­பத்­தி­ன­ரைப் பார்ப்­ப­தற்­காக எட்டு மணி நேரம் நின்று பேருந்து நுழை­வுச் சீட்டை அவர் வாங்­கி­ யி­ருந்­தார்.

இல்­லத்­த­ர­சி­யான திரு­மதி பியாங்,40, அவ­ரது கண­வர் பாங் யீ ஹாவ், 42, ஆகிய இரு­வ­ரும் மலாக்­கா­வில் உள்ள குடும்­பத்­தி­னரை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­வ­தற்­காக நேற்று புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மி பர­வத் தொடங்­கிய பிறகு முதல் முறை­யாக அவர்­கள் தங்­க­ளு­டைய குடும்­பத்­தி­ன­ரைச் சந்­திக்­கின்­ற­னர்.

"என்­னு­டைய குழந்­தை­கள் துள்ளிக் குதித்­துக் கொண்­டா­டு­கின்­ற­னர். பேருந்­துச் சீட்டு கிைடத்­ததா என்று கேட்­டுக்­கொண்டே இருந்­த­னர்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் சிங்­கப்­பூ­ர­ரான திரு­மதி பியாங் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரது கண­வர் மலே­சி­யர்.

விரி­வு­ப­டுத்­தப்­பட்ட தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் திட்­டத்­தின் (விடி­எல்) கீழ் தடுப்­பூசி போட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் ஜோகூர் கடற்­பா­லம் வழி­யாக மலே­சி­யா­வுக்­குள் நுழை­ய­லாம். தனி­மை­ப்படுத்த மாட்டார்கள்.

இதே ஏற்­பாட்­டின்கீழ் மலே­சி­யர்­களும் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்கு முன்­னர் குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் நீண்­ட­கால அனு­மதி பெற்­ற­வர்­கள் மட்­டும் விடி­எல் வழி­யாக தங்­க­ளு­டைய நாட்­டுக்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இந்­தத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்ட பிறகு 50 விழுக்­காடு கூடு­த­லாக நுழை­வுச் சீட்­டு­களை விற்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளதாக டிரான்ஸ்­டார், காஸ்வேலிங்க் பேருந்து நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன.

அதா­வது நுழை­வுச் சீட்­டு­கள் முழு­மை­யாக விற்­கப்­பட்­டால் நாள்­தோ­றும் 4.320 பேர் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே தனி­மைப்­ப­டுத்­தல் இன்றி பய­ணம் மேற்­கொள்ள முடி­யும்.

உட்­லண்ட்ஸ் தற்­கா­லிக பேருந்து நிலை­யத்­தில் உள்ள டிரான்ஸ்­டார் பேருந்து நிலை­யத்­தி­லும் குவின் ஸ்தி­ரீட்­டில் உள்ள காஸ்வே லிங்க் பேருந்து நிலை­யத்­துக்­கும் நேற்று காலை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் சென்­ற­போது நீண்­ட ­வ­ரி­சை­யில் பலர் காத்­தி­ருப்­ப­தைக் காண முடிந்­தது.

பெரும்­பா­லான பய­ணி­கள் மலே­சியா செல்­வ­தற்­குத் தேவை­யான தடுப்­பூசி சான்­றி­தழ், பய­ணத்­துக்கு முந்­திய தொற்று இல்லை என்­ப­தைக் காட்­டும் பரி­சோ­தனை முடிவு ­கள் போன்ற ஆவ­ணங்­களை கையில் வைத்திருந்தனர்.

ஆனால் ஜோகூ­ருக்­குச் செல்­லும் 80 முதல் 90 விழுக்­காடு பய­ணி­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லர் என்று டிரான்ஸ்­டார் டிரா­வல் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் எல்­சன் யாப் தெரி­வித்­தார்.

மலே­சி­யா­வில் குடும்ப உறுப்­பி­னர்­கள் உள்ள சில சிங்­கப்­பூ­ரர்­கள் மட்­டுமே அங்கு செல்­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

மிகச் சிலரே பொழு­து­போக்­குக்­காக மலே­சியா செல்­வதாகவும் அவர் நேற்று தெரிவித் தார்.