சிங்கப்பூரின் பிரபல இசை அமைப்பாளரான கிளமெண்ட் சோவ், உள்ளூர் இைசக் கலைஞர்களுடன் சேர்ந்து இன்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.
'நாங்கள், சிரிப்பதற்கான காரணம்' என்ற அந்த நிகழ்ச்சியின் வழி சிங்கப்பூர் சமூக அமைப்பான 'ஏடபிள்யூடபிள்யூஏ'வுக்கு (AWWA) நிதி திரட்டப்படும்.
தற்போதைய கொள்ளைநோய் சூழலில் இந்த இசை நிகழ்ச்சி மனதை லேசாக்கும் என்று கிளமெண்ட் சோவ் ெதரிவித்தார்.
'ஏடபிள்யூடபிள்யூஏ' சமூக நல நிதியால் 12,000க்கும் மேற்பட்டோர் பலனடைந்து வருகின்றனர். மழலையர்கள், குழந்தைகள், உதவி தேவைப்படும் பெரியோர் உள்ளிட்டோருக்கு அது ஆதரவு அளித்து வருகிறது. எளிதில் பாதிக்கக் கூடிய மூத்தோருக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் அந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.
கிறிஸ்மஸ் காலக்கட்டத்தில் வசதியற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தும் யோசனை உதித்ததாக கிளமெண்ட் சோவ் கூறினார்.
"நான் எப்போதும் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பேன். அந்த வகையில் 'நாங்கள், சிரிப் பதற்கான காரணம்' இசை நிகழ்ச்சி தோன்றியது," என்றார் அவர்.
இசை அமைப்பாளரான அவர், ஆரம்பத்தில் சிங்கப்பூர் கலைஞர்களில் ஒருவரான நீல் சானுடன் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட ஐந்து பாடல்களை அடங்கிய தொகுப்பை வெளியிட விரும்பினார். ஆனால் கிறிஸ்மஸ் காலத்திற்குள் அதனை செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத்தின் 30வது ஆண்டு நிகழ்ச்சியில் 'ஏடபிள்யூடபிள்யூஏ'வின் மிஷல் இயோவை அவர் சந்தித்தார். அப்போது இரு வரது விருப்பமும் ஒத்துபோனதால் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
"சிங்கப்பூரின் மற்ற கலைஞர் களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியைப் படைக்கும் என்னுடைய விருப்பத்தை அவருடன் பகிர்ந்துகொண்டேன். மிஷலும் நிதி திரட்ட வேண்டிய சூழ்நிலையில் இருப்பது குறித்து தெரிவித்தார். அப்படித்தான் இசை நிகழ்ச்சி பிறந்தது," என்று திரு கிளமெண்ட் சோவ் குறிப்பிட்டார்.
இசை நிகழ்ச்சி 'ஏடபிள்யூடபிள்யூஏ'வின் யுடியூப் ஒளிவழியாக இன்று மாலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.