ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24-12-2021 அன்று மாலை 7.30 முதல் 8.30 மணி வரை "பெற்றோருக்கு சிறப்புக் கருத்தரங்கு" நிகழ்ச்சியை இணையம் வழியாக நடத்தவிருக்கிறது.
கணிதப் பேராசிரியரான திரு. அமானுல்லாஹ் "கல்வி" என்ற தலைப்பிலும், பொதுநல மருத்துவர் டாக்டர் திரு செந்தமிழ் செல்வன் "உடல் நலம்" என்ற தலைப்பிலும், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் "பேச்சுத்திறன்" என்ற தலைப்பிலும் சிற்றுரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
கேள்வி பதில் அங்கமும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான 'ஸூம்' அடையாள எண்: 861 0642 1751 நுழைவுக் குறியீடு: JMCSG அனுமதி இலவசம்.

