மாணவர்களுக்கு தளம் அமைத்த 'பேசும் கலை வளர்ப்போம்'

மாணவர்களுக்கு தளம் அமைத்த 'பேசும் கலை வளர்ப்போம்'

2 mins read
b8dc04f9-be3c-4b34-9570-ce403eb2976a
'பேசும் கலை வளர்ப்போம்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர். -

மாண­வர்­க­ளுக்­குப் பொதுத் தளத்­தில் பேசு­வ­தற்­கும் உரை­யாற்­று­வ­தற்­கும் வாய்ப்­ப­ளிக்­கும் முயற்­சி­யான 'பேசும் கலை வளர்ப்­போம்' மாதாந்­திர நிகழ்ச்சி, ஜாலான் புசார் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு மற்­றும் இளம்­பிறை இலக்­கிய வட்­டம் ஏற்­பாட்­டில் 27வது முறை­யாக இம்­மா­தம் 19ஆம் தேதி மெய்­நி­கர் வழி நடை­பெற்­றது.

கணக்­காய்­வா­ளர் சுல்­தான் நசீ­ரின் 'இன்­றை­யச் சிந்­தனை' அங்­கத்­தோடு தொடங்­கிய இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராக சிங்­கப்­பூர் ஸ்ரீ நாரா­யண மிஷன் தலைமை நிர்­வாக அதி­காரி திரு எஸ். தேவேந்­தி­ரன் பங்­கேற்று சிறப்­பித்­தார்.

மாண­வர்­க­ளுக்கு பொது வெளியில் பேச தளம் அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டி­ருப்­பதை வெகு­வா­கப் பாராட்­டி­னார்.

சிறு­வ­ய­தில் தனக்கு தமிழ் கற்க வாய்ப்­பில்­லா­மல் போன­தால் தற்­போது கற்­று ­வ­ரு­வ­தாக கூறிய அவர், நிகழ்ச்­சி­யில் மாண­வர்­கள் மிகச் சர­ள­மா­கப் பேசு­வ­தைப் பாராட்­டி­னார்.

சிறப்­புப்­பேச்­சா­ளர் 'ஹேஷ்-பீஸ்' அமைப்­பின் நிறு­வ­னத் தலை­வர் திரு­மதி நஸ்­ஹத் ஃபஹீமா "சமூக நல்­லி­ணக்­கத்­தில் தன் பய­ணம்" என்ற தலைப்­பில் உரை நிகழ்த்­தி­னார்.

மாண­வர்­கள் அஷ்­மிதா, கீர்த்­தனா, ஹஃபீஸ் சிக்­கந்­தர், இலக்­கியா, ஹாஷிம் யூசு­பு­தீன், சஹானா கிரிஷ், சமி­க்ஷ்சா கிரிஷ் மற்­றும் கோத்­தாரி ஷா இப்­ரா­ஹீம், ஹரி பாபு, தமீம் அன்­சாரி ஆகி­யோர் பல்­வேறு தலைப்­பு­களில் பேசி­னர்.

மூத்த சமூக அடித்­த­ளத் தலை­வ­ரான புதிய நிலா மு. ஜஹாங்­கீர் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்வை திரு­மதி நபிலா நஸ்­ரின் நெறி­யா­ளுகை செய்ய திரு அ. முஹம்­மது பிலால் வர­வேற்று தொடக்க உரை நிகழ்த்­தி­னார்.

மாண­வர்­க­ளுக்கு மின்­னி­லக்க சான்­றி­தழ்­களை திரு­மதி மஹ்­ஜ­பின் பகிர்ந்­தார். கவி­ஞர் அஷ்­ரப் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவை நாடி­யது.

ஸூம் வழி 40 பார்­வை­யா­ளர்­களும் யூடி­யூப், ஃபேஸ்புக் வாயி­லாக வெளி­நாட்­டி­னர் பல­ரும் இதில் கலந்­து­கொண்­ட­னர்.

(செய்தி, படம் : அ. முஹம்­மது பிலால்)