இணையத்தில் முறையற்ற கருத்துகளைப் பதிவிட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

இணையத்தில் முறையற்ற கருத்துகளைப் பதிவிட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
417768d5-c707-43eb-9664-88f74c61e646
-

இஸ்­லாத்­துக்கு எதி­ரா­க­வும் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான பெண் ஒரு­வரை இழி­வு­ப­டுத்­தும் வகை­யி­லும் இன்ஸ்­ட­கி­ரா­மில் கருத்து பதி­விட்ட குற்­றத்­துக்­காக ஆட­வர் ஒரு­வர் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார். தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயின்­று­கொண்­டி­ருந்­த­போது சுன் சிகோங் இந்­தக் குற்­றத்­தைப் புரிந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

தொல்லை கொடுத்­தது, பிற­ரு­டைய சம­யத்தை இழி­வு­ப­டுத்­தும் கருத்­து­க­ளை இணை­யத்­தில் பதி­விட்டு அவர்­க­ளின் மன­தைப் புண்­ப­டுத்­தி­யது, ஆபா­சப் படங்­களை வைத்­தி­ருந்­தது ஆகிய குற்­றங்­க­ளின் பேரில் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் இஸ்­லாத்­துக்கு எதி­ராக இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­வு­க­ளைப் பதி­வேற்­றம் செய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாலி­யல் வன்­கொ­டு­மை­யால் பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு ஏற்­பட்ட அலு­ப­வங்­க­ளைப் பற்றி முறை­யற்ற கருத்­து­க­ளை­யும் அவர் தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் ஜூன் மாதம் 7ஆம் தேதி­யன்று பதி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பாலி­யல் வன்­கொ­டு­மை­யால் பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு எதி­ராக அவர் எத்­த­கைய கருத்­து­

க­ளைத் தெரி­வித்­தார் என்­பது குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பி­ட­வில்லை.

கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லும் மே மாதத்­தி­லும் இரண்டு ஆபா­சப் படங்­களை அவர் பதி­வி­றக்­கம் செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது கைபே­சி­யில் அவை

கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­

ப­டு­கிறது.

சுன் புரிந்­த­தா­கக் கூறப்­படும் குற்­றங்­கள் மிக­வும் மோச­மா­னவை என்­றும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு எதி­ராக ஒழுங்­கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி­யன்று தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி டுவிட்­ட­ரில் பதி­விட்­டது.

இன்ஸ்­ட­கி­ரா­மில் ஒரு­வர் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கக் கருத்­து

­க­ளைப் பதிவு செய்­துள்­ள­தா­க­வும் அக்­க­ருத்­து­கள் முஸ்­லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக வன்­மு­றை­யைக் கட்­ட­வி­ழ்க்க கார­ண­மா­கக்­கூ­டும் என்­றும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் பல புகார்­கள் வந்ததாகக் காவல்­துறை கூறி­யது.

இது­தொ­டர்­பாக விசா­ரணை நடத்­திய ஜூரோங் காவல்­து­றைப் பிரிவு அதி­கா­ரி­கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி­யன்று சுன்­னைக் கைது செய்­த­னர்.

அவ­ரு­டைய கணி­னி­யை­யும் கைபே­சி­யை­யும் அவர்­கள் பறி­

மு­தல் செய்­த­னர்.

இந்­நி­லை­யில், சுன் $10,000 பிணை­யில் விடுவிக்கப்பட்­டுள்­ளார். அவர் தொடர்­பான வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.