கடற்பாலம் வழியாக 35,000க்கும் மேற்பட்ட முறை மக்கள் சென்று வந்தனர் பயணிகள் பாதுகாப்பு மேம்பட எல்லையில் புதிய ஏற்பாடுகள்

கடற்பாலம் வழியாக 35,000க்கும் மேற்பட்ட முறை மக்கள் சென்று வந்தனர் பயணிகள் பாதுகாப்பு மேம்பட எல்லையில் புதிய ஏற்பாடுகள்

2 mins read
c45127ce-44cd-4dd0-b30d-48c30d541d84
-

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­க­கும் இடை­யி­லான தரை­வழி எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டது முதல் ஜோகூர் கடற்­பா­லம் வழி­யாக 35,000க்கும் அதிக தடவை மக்­கள் சென்று வந்­து உள்ளனர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான தனிமை உத்தர வில்லாத பய­ணத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) மக்­கள் மேலும் பாது­காப்­பாக சென்­று­வர புதிய திட்­டங்­கள் அங்கு இடம்­பெறவிருக்­கின்றன.

உட்­லண்­டஸ் சோத­னைச் சாவடி­யில் அதி­கா­ரி­கள் நிர்­வ­கிக்­கும் குடி­நு­ழைவு முகப்­பு­கள் அடுத்த மாதம் முதல் மாற்றி அமைக்­கப்­படும்.

பய­ணி­கள் தங்­கள் கடப்­பிதழைத் தாங்­களே சாத­னத்­தில் காட்டி அனு­மதி பெற்றுச் செல்­ல­லாம்.

இத­னால் விடி­எல் ஏற்­பாட்­டின்­கீழ் தரை­வ­ழி­யா­க சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோ­ருக்­கும் குடி­நு­ழைவு அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் நெருக்­கம் இருக்­காது.

இப்­போது பய­ணி­கள் தங்­க­ளுடைய கடப்­பி­தழை குடி­நு­ழைவு முகப்பு அதி­கா­ரி­க­ளி­டம் கொடுத்து அனு­மதி பெறு­கி­றார்­கள்.

பய­ணி­க­ளுக்குப் பாது­காப்­பு­மிக்க, தங்குதடை­யில்­லாத குடி­நுழைவு நடை­மு­றை­கள் நடப்­பில் இருக்­க­வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் பல செயல்­திட்­டங்­கள் படிப்­ப­டி­யாக அமல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவற்­றின் ஒரு பகுதி­யாக இந்த ஏற்­பா­டு­கள் இடம்­பெறு­கின்­றன என்று எல்­லைக் கட்­டுப்­பாட்டு அமைப்பு கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

பய­ணி­க­ளுக்­கும் அதி­கா­ரி­களுக்­கும் கூடு­தல் பாது­காப்பு ஏற்­பா­டாக முகப்­பு­களில் கண்­ணாடித் தடுப்­பு­களும் அமைக்­கப்­படும்.

அந்த முகப்­பு­களில் செயல்­படும் அதி­கா­ரி­கள், பய­ணி­யின் தடுப்­பூசி சான்­றி­தழ், பரி­சோ­தனை முடி­வு­கள் முத­லான ஆவ­ணங்­க­ளைப் பாது­காப்­பான முறை­யில் பரி­சோ­திப்­பார்­கள். குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம், அடுத்த மாதம் முதல் மின்­னணு வருகை அனு­ம­தியை வழங்க இருக்­கிறது.

தரை­வ­ழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோர் அதைப் பயன்­ப­டுத்த முடி­யும்.

அதில் ஒரு­வர் எவ்­வ­ளவு காலம் சிங்­கப்­பூ­ரில் தங்க முடி­யும் என்­பது போன்ற விவ­ரங்­கள் இருக்­கும். இத்­த­கைய ஏற்­பாடு சாங்கி விமான நிலை­யத்­தில் ஏற்­கெ­னவே நடப்­பில் உள்­ளது.

கடப்­பி­தழ்­களில் முத்­திரை குத்­தப்­படும் நடை­மு­றைக்­குப் பதி­லாக இந்­தப் புதிய ஏற்­பாடு இடம்­பெ­றும்.

இந்த மின்­னணு அனு­ம­தியை மின்­னஞ்­சல் வழி­யா­கப் பெற­லாம். பய­ணி­கள் 'எஸ்ஜி வருகை அட்டையை' இணை­யம் மூலம் தாக்­கல் செய்­யும்­போது அந்த அனு­மதி அவர்­க­ளுக்குக் கிடைக்­கும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் மலே­சி­யா­வுக்­குச் செல்­ல­வும் அதே­போல மலே­சியர்கள் ­கடற்­பா­லம் வழி சிங்­கப்­பூர் வர­வும் ஏது­வாக டிசம்­பர் 20ஆம் தேதி முதல் தரை­வழி விடி­எல் விரி­வு­படுத்­தப்­பட்­டது. அதைத் தொடர்ந்து இந்­தப் புதிய ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்கும் இடை­யில் தரை­வ­ழி­யா­கப் பேருந்­துச் சேவை நடத்­தும் நிறு­வனங்­கள் சேவை­களை அதி­க­ரிக்­கப் போவ­தாக தெரி­வித்துள்­ளன.

இதை­ய­டுத்து அன்­றா­டம் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் 4,320 பேர் சென்று வர முடி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விடி­எல் பயண ஏற்­பாடு நவம்­பர் 29ஆம் தேதி தொடங்­கி­யது. அது முதல் டிசம்­பர் 20ஆம் தேதி பிற்­பகல் 3 மணி நில­வ­ரப்­படி 24,540க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மலே­சியா சென்று இருக்­கி­றார்­கள்.

அதே கால­கட்­டத்­தின்போது விடி­எல் தரை­வழி ஏற்­பாட்­டின் மூலம் 12,455 பேர் சிங்­கப்­பூர் வந்து இருக்­கி­றார்­கள்.