இன்றுமுதல் அழைப்பு வரும்

இன்றுமுதல் அழைப்பு வரும்

1 mins read
eb3a73c1-d022-481e-9b81-a8bb302310dd
-

சிங்­கப்­பூ­ரில் 12க்குக் குறைந்த வய­துள்ள சிறார்­க­ளுக்கு கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி டிசம்­பர் 27ஆம் தேதி முதல் போடப்­படும். இதற்­கான முன்­பதிவு இன்று தொடங்­கு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகுதி பெற்­றுள்ள கல்வி அமைச்சு தொடக்­கப்­பள்­ளி­கள், மத­ரசாக்­களில் பயி­லும் தொடக்­கப்­பள்ளி 4 முதல் 6ஆம் வகுப்பு வரைப்­பட்ட பிள்­ளை­களுக்கு இன்று முதல் குறுஞ்­செய்தி அழைப்பு அனுப்­பப்­படும்.

அதில் இருக்­கும் இணைப்­பின் மூலம் அவர்­கள் முன்­ப­திவு செய்­ய­லாம். அடுத்த ஆண்டு ஜன­வரி 3ஆம் தேதி தொடங்கி இந்­தக் குறுஞ்­செய்தி தொடக்­கப்­பள்ளி 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்­கும்­ பிள்­ளை­களுக்கு அனுப்­பப்­படும்.

அந்­தச் செய்தி கிடைக்­காத பெற்­றோர் அல்­லது அதில் கண்டுள்ள இணைப்­பைப் பயன்­படுத்த இய­லாத பெற்­றோர் தேசிய தேதி­நேர முன்­ப­திவு முறை மூலம் (child.vaccine.gov.sg) பதி­ய­லாம். இந்த முறை டிசம்­பர் 27 முதல் செயல்­படும்.

child.vaccine.gov.sg முக­வரி மூலம் பதிந்து இருப்­போர் இந்த முக­வ­ரி­யில் கிடைக்­கும் இணக்கப்­ ப­டி­வம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்டு அந்த ஆவ­ணத்தைத் தடுப்­பூசி நிலை­யத்­திற்கு எடுத்­து­வர வேண்­டும். பெற்­றோர் அல்­லாத மற்­ற­வர்­கள், பெற்­றோர் அங்­கீ­க­ரித்­துள்ள படி­வத்தைக் கொண்­டு­வ­ர­வேண்­டும். இந்­தப்­ ப­டி­வ­த்தை முன்­பதிவின்­போது பெற­லாம்.

சிறா­ருக்­கான தடுப்­பூசி இயக்­கம் வெற்றிகரமான முறையில் முடி­ந்த பிற­கும் பாலர்­பள்ளி­களில், பள்­ளிக்­கூ­டங்­களில் பாது­காப்பு நிபந்­த­னை­களை மாணவர்கள் பின்பற்ற வேண்­டும். எந்த தடுப்­பூ­சி­யும் 100% பாது­காப்பைத் தராது என்­பதே இதற்­கான கார­ணம் என்று கூறப்பட்டுள்ளது.