தன்னை நேரில் சந்திக்காததால் திரு முகமது ஷாமிர் நூர் முகமது நூரை, 19 வயது ஹேரி ஹில்மி ஹராஹப் ஹசான் என்பவர் குத்தி, உதைத்திருக்கிறார். இருவரும் முன்னதாக ஒன்றாகப் படித்தவர்கள். இச்சம்பவத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு 20 வயது ஷாமிரும் அவருடன் வேலை செய்த மூவரும் வாகனத்தில் ஹேரியைக் கடத்திச் சென்று பூங்கா ஒன்றில் தாக்கியிருக்கின்றனர்.
ஷாமிர் மீது சுமத்தப்பட்டிருந்த ஆள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரரான இவர், அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஷாமிருக்கு நன்னடத்தை ஆணை பிறப்பிப்பது குறித்து உறுதிசெய்ய நீதிபதி அறிக்கையைத் தயார்செய்யுமாறு சொன்னார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று ரெட்ஹில் சந்தைக்கு அருகே ஷாமிரை ஹேரி தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது. மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று ஷாமிரும் அவரின் மூன்று சக ஊழியர்களும் ஹேரியைக் கடத்திச் சென்று தாக்கினர்.
வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதியன்று ஷாமிருக்குத் தீர்ப்பளிக்கப்படும்.
ஹேரியின் கடத்தலில் ஷாமிருடன் ஈடுபட்ட இதர மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

