ஜெர்மனியின் எஃப்ஜிஎஸ் பயர்ன் எஃப்217 போர்க்கப்பல் சிங்கப்பூருக்கு வந்துள்ளது. சாங்கி கடற்படைத் தளத்தில் தற்போது இருக்கும் இது, ஆறு மாதங்களுக்கு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இயங்கும். 19 ஆண்டுகளில் முதன்முறையாக ஜெர்மானியப் போர்க்கப்பல் ஒன்று இந்த வட்டாரத்திற்கு வந்துள்ளது.
இந்தப் போர்க்கப்பல் கிறிஸ்மஸ், புத்தாண்டு காலத்தில் இரண்டு வாரங்களுக்கு சாங்கி கடற்படைத் தளத்தில் இருக்கும். இந்த காலகட்டத்தில் இதற்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்ெளகொள்ளப்படும்.
மேலும், இதில் உள்ள 200க்கும் அதிகமானோர் ஓய்வு எடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் வில்லம்ஷாவன் நகரிலிருந்து கிளம்பியது. அதற்குப் பிறகு தென்சீனக் கடலின் வழியாக சிங்கப்பூருக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்திலிருந்து பயர்ன் போர்க்கப்பல் வியட்னாமிற்குச் செல்லும்.

