விமானநிலைய ஊழியர் பாதுகாப்பு அதிகரிப்பு

விமானநிலைய ஊழியர் பாதுகாப்பு அதிகரிப்பு

2 mins read
860f52d1-e1a9-4984-aa7e-fe138a688c64
-

மேம்பட்ட சுகாதாரக் கவசங்கள் தரப்படும்

உல­கம் முழு­வ­தும் ஓமிக்­ரான் தொற்று வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில், சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளு­டன் தொடர்­பு­டைய விமா­ன­நி­லைய ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கு­மான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மேம்­ப­டுத்­தப்­படும் என சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

டாக்சி நிறுத்­தம் போன்ற பொது இடங்­களில் பணி­யாற்­று­வோர் உட்­பட எல்லா விமா­ன­

நி­லைய ஊழி­யர்­க­ளுக்­கும் என்95 முகக்­க­வ­சம், முகக்­காப்பு போன்ற மேம்­ப­டுத்­தப்­பட்ட தனி­ந­பர் பாது­காப்­புச் சாத­னங்­கள் வழங்­கப்­

ப­டு­வ­தாக ஆணை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

மேலும், விமான நிலை­யத்­தின் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் அனை­

வ­ரும் பரி­சோ­தனை நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். தற்­போது நடப்­பில் உள்ள ஏழு நாள் ஏஆர்டி பரி­சோ­த­னைக்­குப் பதில் ஏழு நாள் பிசி­ஆர் பரி­சோ­தனை என மேம்­ப­டுத்­தப்­படும் என்­றது ஆணை­யம்.

விமா­னங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­களும் மேம்­ப­டுத்­தப்­பட்ட ஏழு­நாள் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

மேலும் மூன்று நாள்­க­ளுக்கு ஒரு­முறை நிறு­வ­னத்­தின் கண்­கா­ணிப்­பி­லான ஏஆர்டி பரி­சோ­த­னையை அவர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தும் ஆணை­யத்­தின் புதிய நட­வ­டிக்கை.

விடி­எல் எனப்­படும் தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதை­கள் திட்­டத்­திற்­கான பய­ணச்­சீட்­டு­கள் அனைத்­தும் இன்று (டிசம்­பர் 23) முதல் அடுத்த ஆண்டு ஜன­வரி 20 வரை நிறுத்­தி­வைக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறி­விப்­பைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தனது ஊழி­யர்­க­ளுக்­கான பாது­காப்பு மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­களை வெளி­யிட்­டது.

ஓமிக்­ரான் தொற்று வேக­மா­கப் பரவி வரு­வ­தைக் கவ­னத்­தில் கொண்டு எடுக்­கப்­பட்டு வரும் முன்­னெச்­ச­ரிக்­கைப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களுள் இவையும் அடங்கும்.