4 ஆண்டு இடைவெளி பிறகு சிங்கப்பூர், மலேசியா சந்திப்பு

4 ஆண்டு இடைவெளி பிறகு சிங்கப்பூர், மலேசியா சந்திப்பு

1 mins read
eaed6910-0783-4831-b6b6-fd764fad916e
-

நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தென் ஜோகூ­ரின் இஸ்­கந்­தார் பகுதி பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு தொடர்­பில் மறு­ஆய்வு செய்­திட சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் நேற்று சந்­தித்­துப் பேசின.

'இஸ்­கந்­தார் மலே­சி­யா­வுக்­கான மலே­சிய, சிங்­கப்­பூர் இணை அமைச்­சு­நி­லைக் குழு' 2017ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இவ்­வாண்­டில் தான் சந்­திக்க முடிந்­தது.

சிங்­கப்­பூ­ரின் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் ஆகிய இரு­வ­ரின் தலை­மை­யி­லும் நேற்­றைய சந்­திப்­புக் கூட்­டம் நிகழ்ந்­தது. பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் (பொரு­ளி­யல் பிரிவு) முஸ்­தபா முகம்­மது, தற்­போ­தைய ஜோகூர் முதல்­வர் ஹஸ்னி முகம்­மது ஆகி­யோர் மலே­சி­யா­வைப் பிர­தி­நி­தித்­தனர்.

தொழில்­துறை ஒத்­து­ழைப்பு, சுற்­றுப்­பு­றம், சுற்­றுப்­ப­ய­ணம், போக்­கு­வரத்து இணைப்­பு­கள் போன்ற பல்­வேறு அம்­சங்­கள் தொடர்­பில் இரு­தரப்பு பணிக்­கு­ழுக்­கள் முன்­னேற்­றம் கண்­டது குறித்து நேற்­றைய சந்­திப்­பில் பேசப்­பட்­டது.

தனிமை உத்­த­ர­வின்றி தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் திட்­டத்­தின் வெற்­றி­யும் குறிப்­பி­டப்­பட்­டது. மாறி­வ­ரும் பொதுச் சுகா­தார சூழ­லைக் கருத்­தில் கொண்டு திட்­டம் விரி­வு­படுத்­தப்­படும் என்று இரு­த­ரப்­பு­களும் தெரி­வித்­தன. மீண்­டும் அடுத்த ஆண்டு இடைப்­ப­கு­தி­யில் அமைச்­சு­நி­லைக் குழு சந்­திக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.