கல்வி அமைச்சு: 80% மாணவர்களுக்குத் தாங்கள் விரும்பிய உயர்நிலைப் பள்ளிகளில் இடம் கிடைத்துள்ளது

கல்வி அமைச்சு: 80% மாணவர்களுக்குத் தாங்கள் விரும்பிய உயர்நிலைப் பள்ளிகளில் இடம் கிடைத்துள்ளது

1 mins read
23726a1b-1f64-440e-b351-eb6b8a1f02cb
-

புதிய மதிப்­பெண் அமைப்­பு­மு­றை­யைப் பின்­பற்­றிய இவ்­வாண்­டின் தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்வு (பிஎஸ்­எல்இ) முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொண்ட ஆறாம் வகுப்பு மாண­வர்­களில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­டோ­ருக்­குத் தாங்­கள் விரும்­பிய உயர்­நி­லைப் பள்­ளி­யில் இடம் கிடைத்­துள்­ளது.

முதல் மூன்று இடங்­களில் தங்­களுக்கு விருப்­ப­மான உயர்­நி­லைப் பள்­ளி­களை இப்­பி­ரி­வி­னர் குறிப்­பிட்­டி­ருந்­த­தா­க­வும் அவற்­றில் ஒன்று கிடைத்­துள்­ள­தா­க­வும் கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

ஆறு உயர்­நி­லைப் பள்ளி தெரி­வு­க­ளை­யும் குறிப்­பிட்­டி­ருந்த மாண­வர்­களில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு அப்­பட்­டி­ய­லில் இடம்­பெற்ற உயர்­நி­லைப் பள்ளி கிடைத்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

மாண­வர்­க­ளுக்கு நேற்று அவர்­களது உயர்­நி­லைப் பள்ளி முடி­வு­கள் தெரி­விக்­கப்­பட்­டது.

உயர்­நி­லைப் பள்ளி என்ன என்­பதை அறிந்த உடனே மாண­வர்­கள் அந்­தந்­தப் பள்­ளி­க­ளுக்­குச் செல்­லத் தேவை­யில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இணை­யம் வாயி­லாக புத்­த­கங்­கள், சீரு­டை­களை வாங்­கு­வது, புத்­த­கப் பட்­டி­யல், பள்ளி முதல் நாள் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் பள்­ளி­க­ளின் இணை­யத்­த­ளங்­களை மாண­வர்­கள் நாடி­னால் தக­வல் அறி­ய­லாம் என்று அறி­வு­றுத்­தப்­படு­கிறது.

'பேரண்ட்ஸ் கேட்வே' செய­லி­யைப் பயன்­ப­டுத்­தும் பெற்­றோர்­களுக்கு, உயர்­நிலை ஒன்­றுக்­குச் செல்­ல­வி­ருக்­கும் தங்­க­ளின் பிள்­ளை­யின் உயர்­நி­லைப் பள்­ளி­யி­லிருந்து தக­வல் கிடைக்­கும்.

அடுத்த ஆண்டு பள்ளி முதல் நாளான ஜன­வரி 4ஆம் தேதி­யன்று தங்களின் உயர்நிலைப் பள்ளிக்குப் போக முடி­யாத மாண­வர்­கள், பள்ளி­யு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­கொண்டு பள்­ளி­யில் தங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடத்தை உறு­தி­செய்­தி­ட­லாம்.

அதற்கேற்ப பள்­ளி­யும் அவர்­களுக்­காக அவ்­விடத்தை ஒதுக்­கி­டும். கூடு­தல் விவ­ரம் பெற, கல்வி அமைச்­சின் இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.