சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் வைத்தது ஆகியவை தொடர்பில் 19 பேர் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். காவலர்கள் இம்மாதம் நடத்திய இரண்டு அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
முதல் சோதனை நடவடிக்கையின்போது பந்தயப்பிடிப்பை நடத்தியதாக 77, 78 வயதுகளுடைய இரு ஆடவர்களும் அவர்களிடம் பந்தயம் கட்டியதாக 56 வயதுக்கும் 88 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்களும் கண்டறியப்பட்டனர்.
இரண்டாவது சோதனை நடவடிக்கையை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுடன் காவலர்கள் இணைந்து நடத்தினர்.
லோயாங் வட்டாரத்தில் அமைந்த வீடு ஒன்றில் 21 பேர் கலந்துறவாடுவதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
சூதாட்டத்திற்கான பொருள்கள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் குறிப்பிட்ட ஒரு கட்டணத்திற்குத் துணையாக இருக்க பெண் ஒருவரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
படம்: சிங்கப்பூர் காவல் படை

