'விடிஎல்' பயணிகளில் 53 பேருக்கு ஓமிக்ரான்

'விடிஎல்' பயணிகளில் 53 பேருக்கு ஓமிக்ரான்

2 mins read
cc7fa872-ad71-4bf8-818c-41cd68bbd7a5
-

சிங்­கப்­பூ­ரில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) வரை பதி­வான 65 ஓமிக்­ரான் சம்­ப­வங்­க­ளில 53 விடி­எல் பய­ணம் மூலம் இங்கு வந்­தோ­ரி­டம் உறு­தி­செய்­யப்­பட்­டவை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இந்த 53 பேரில் 41 பேரி­டம் ஓமிக்­ரான் தொற்று இருப்­பது சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் நடத்­தப்­பட்ட பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் கண்­ட­றி­யப்­பட்­டது.

எஞ்­சிய 12 பேருக்கு விடி­எல் பய­ணத்­திட்­டத்­திற்­கான மேம்­

ப­டுத்­தப்­பட்ட பரி­சோ­தனை நடை­மு­றை­யில் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக அமைச்சு நேற்று கூறி­யது.

இது­வரை பதி­வா­கி­யுள்ள ஓமிக்­ரான் சம்­ப­வங்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டவை நாடு திரும்­பிய சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் மற்­றும் நீண்­ட­கால அனு­ம­தி­யில் வசிப்­போ­ரி­டம் உறுதி­ செய்­யப்­பட்­டவை என்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யா­ள­ரி­டம் சுகா­தார அமைச்சு கூறி­யது.

இருப்­பி­னும் இவர்­கள் எந்தெந்த நாடு­க­ளி­லி­ருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்ற விவ­ரத்தை அது வெளி­யி­ட­வில்லை.

ஓமிக்ரான் பரவலைக் கட்டுப் படுத்த, விடி­எல் திட்­டப் பய­ணத்­துக்­கான விமான, பேருந்து பய­ணச்­சீட்­டு­க­ளின் விற்­ப­னையை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு நிறுத்­தி­வைப்­ப­தாக சுகா­தார அமைச்சு புதன்­கி­ழமை கூறி­யது.

அதே­நே­ரம் ஓமிக்­ரான் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது முதல் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­வோ­ரில் அதி­க­மா­னோ­ரி­டம் கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்டு வரு­கிறது. புதன்­கி­ழமை அந்த எண்­ணிக்கை 76 என உச்­சத்­தைத் தொட்­டது.

சமூக அள­வில் ஓமிக்­ரான் தொற்று பர­வு­வ­தைத் தடுக்க நட­

வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­

வ­தா­கத் தெரி­வித்த அமைச்சு, தொடர்­புத் தடம் அறி­யும் முறை மூலம் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு வரு வதா­கக் குறிப்பிட்டது.

ஓமிக்­ரான் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­வர்க­ளு­ட­னும் சந்­தே­கத்­திற்கு உட்­பட்­ட­வர்­க­ளு­ட­னும் தொடர்பிலிருந்த அனை­வ­ரும் தனித்­துவ தங்­கு­மி­டங்­களில் பத்து நாள்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் அது கூறியது.

வெளி­நா­டு­களில் இருந்து 'விடிஎல்' பய­ணத்­திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனை

­வ­ரும் கொவிட்-19 பரி­சோ­தனை நடை­மு­றை­களை முறை­யா­கப் பின்­பற்­ற­வேண்­டும் என அமைச்சு கூறியுள்ளது.

அவ்­வாறு செய்­யத் தவ­று­ப­வர்­கள் மீது அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர்­

க­ளுக்கு இல்­லத்­த­னிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அது எச்­ச­ரித்­துள்­ளது.

திங்கட்கிழமை நிலவரப்படி 65 ஓமிக்ரான் சம்பவங்களில் 12 உள்ளூர் தொற்று