பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த ஆடவர்

1 mins read
80c7d4f9-460d-47e2-8dc7-58199f0bf5c9
-

கொடுத்த பரி­சுப்­பொ­ருளை

ஏற்­றுக்­கொள்ள மறுத்த இரு­வரை ஆட­வர் ஒரு­வர் இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து ஜூலை மாதம் வரை விடா­மல் பின்­

தொ­டர்ந்து தொல்லை கொடுத்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தக் குற்­றத்தை 21 வயது சூன் சியேன் ஃபெங் ஒப்­புக்­கொண்­டார்.

பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரின் அடை­யா­ளத்­தைக் காக்க அவர்­

க­ளது பெயர்­களை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­

பட்­டுள்­ளது.

இவ்­வி­ரு­வ­ரின் வீட்­டின்

கத­வுக்கு வெளியே புகைத்து முடித்த சிக­ரெட்­டு­களை சூன் விட்­டுச் சென்­ற­தா­க­வும் முட்­டை­களை வீசி உடைத்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

வீட்­டிற்­குள் அவர்­கள் என்ன செய்­கி­றார்­கள் எனப் பார்க்க விரும்­பு­வ­தா­க­வும் சன்­னல்­க­ளைத் திறந்­து­வைத்­தி­ருக்­கவும் கூறி வீட்­டிற்கு வெளியே இரண்டு

கடி­தங்­களை சூன் விட்­டுச் சென்­ற­தா­க­வும் அர­சாங்க

வழக்­க­றி­ஞர் கூறி­னார்.