இலவசங்கள் மோசடி; விழிப்புடன் இருக்க வலியுறுத்தல்

2 mins read
38f65cfd-5070-4c67-bb15-2a0e0f626d38
-

பிர­பல நிறு­வ­னங்­கள் இல­வ­சப் பொருட்­களை தரு­வ­தாக இணை­யம் மூலம் தக­வல்­களோ இணைப்பு­ களோ அனுப்­பப்­பட்­டால் அவை மோச­டிக்­கா­ரர்­கள் விரிக்­கும் வலை­யாக இருக்­கக்­கூ­டும் என்ற புரி­தல் பொது­மக்­க­ளுக்கு இருக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்

­ப­டு­கிறது.

பண்­டி­கைக்­ கா­லத்­தைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி இத்­த­கைய பல மோச­டி­கள் நிகழ்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இணை­யம் மூலம் பொது­மக்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைப் பெறும் மோசடி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக இணை­யப் பாது­காப்பு நிறு­வ­ன­மான குரூப்-1பி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

பொது­வாக தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளைப் போல பாசாங்கு செய்து, ஆய்­வில் பங்­கெ­டுத்­தால் இல­வ­சப் பொருட்­கள் வழங்­கப்­படும் என ஆசை காட்டி தனிப்­பட்ட விவ­ரங்­களை மோசடிக்­

கா­ரர்­கள் பெற்­றுக்­கொள்­கின்­ற­னர். இது­தொ­டர்­பாக உள்­ளூர் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்

­க­ளி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி கேட்­ட­போது, பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என அவை கேட்­டுக்­கொண்­டன.

இத்­த­கைய மோசடி முதன்­

மு­த­லாக 2018ஆம் ஆண்­டில் தலை­தூக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. உல­க­ளா­விய நிலை­யில் சில பிர­ப­ல­மான நிறு­வ­னங்­கள் போல பாசாங்கு செய்து மோசடி செய்­யப்­பட்­டது. ஆனால் இந்த

ஆண்­டில் 91 நாடு­களில் குறைந்­தது 121 பிர­பல நிறு­வ­னங்­க­ளின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி மோசடி புரி­யப்­பட்­டது. பலர் நம்பி ஏமா­று­ வ­தா­லும் கொவிட்-19 சூழல் நிலவு­ வ­தா­லும் இத்­த­கைய மோச­டிக் குற்­றங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக குரூப்- 1பியின் மின்­னி­லக்க அபா­யப் பாது­காப்­புப் பிரி­வின் (ஆசிய பசி­பிக்) தலை­வர் திரு இலியா ரோஸ்­னோவ் கூறி­னார்.

"கொவிட்-19 நெருக்­க­டி­நிலை பய உணர்வை அதி­க­ரித்­துள்­ளது. மன­வு­ளைச்­ச­லால் திண­று­ப­வர்­

க­ளால் சரி­யாக யோசிக்க முடி­யாது. இதை மோச­டிக்­கா­ரர்­கள் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்

­ப­டுத்து­கின்­ற­னர்," என்­றார் அவர்.