பயங்கரவாத அமைப்புக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டு

2 mins read
30a6510f-d8de-4bb1-a9a7-857945e76aed
-

இணை­யத்­த­ளங்­கள் மூலம் 'ஹயட் தஹ்­ரிர் அல்-ஷாம்' (எச்­டி­எஸ்) எனும் பயங்­க­ர­வா­தக் குழு­வுக்­குக் கிட்­டத்­தட்ட $900 நிதி அனுப்­பி­ய­தன் தொடர்­பில் பங்­ளா­தேஷை சேர்ந்த 27 வயது அக­மது ஃபைசால் (படம்) நேற்று நீதி­மன்­றத்­தில் காணொளி இணைப்பு வழி முன்­னி­லை­யா­னார்.

பயங்­க­ர­வா­தம் (நிதி ஒடுக்­கும்) சட்­டத்­தின் கீழ் ஃபைசால் மீது 15 குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின.

கட்­டு­மான ஊழி­ய­ராக ஃபைசால் இங்கு 2017ஆம் ஆண்­டில் வேலை செய்­யத் தொடங்­கி­ய­தா­க­வும் மறு ஆண்­டில் சுய­தீ­வி­ர­வா­தச் சிந்­த­னைக்கு ஆளா­ன­தா­க­வும் உள்­துறை அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

பின்­னர், ஈராக்­கின் ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு கொள்­கை­க­ளால் ஈர்க்­கப்­பட்டு, அங்கு சென்று சிரியா அர­சாங்­கத்­து­டன் போரிட விரும்­பி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

ஃபைசாலின் கடப்­பாடு பின்­னர் சிரி­யா­வில் இஸ்­லா­மிய கலீ­ப­கம் ஒன்றை நிறு­வு­வ­தில் தீவி­ர­மாக உள்ள 'எச்­டி­எஸ்' போராளி அமைப்­பின் பக்­கம் 2019ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் சென்­றது.

"பயங்­க­ர­வா­தம், பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி அளிப்­பது ஆகி­ய­வற்­றைத் தடுப்­பது, ஒடுக்­கு­வது தொடர்­பில் ஐக்­கிய நாட்டு பாது­காப்பு மன்­றம் கொண்­டுள்ள தீர்­மா­னங்­க­ளின் கீழ் 'எச்­டி­எஸ்' ஒரு பயங்­க­ர­வாத அமைப்­பா­கக் குறிப்­பி­டப்­ப­டு­கிறது," என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­கும் அக்­டோ­பர் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஃபைசால் வெவ்­வேறு இணை­யத்­த­ளங்­கள் மூலம் பணத்தை அனுப்பி இருந்­த­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டன. சிரி­யா­வில் 'எச்­டி­எஸ்' திட்­ட­மிட்­டி­ருப்­ப­தற்கு ஒரு பகு­தி­யாக அல்­லது முழு­மை­யா­கத் தான் அளித்த நிதி பலன் அளித்­தி­ருக்­கும் என்­ப­தைத் தான் அறிந்­தி­ருந்­தார் என்று அமைச்சு தெரி­வித்­தது.

உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் பயங்­க­ர­வா­தம் தொடர்­பான செயல்­களில் ஈடு­பட்­ட­தாக பின்­னர் கைது செய்­யப்­பட்ட ஃபைசாலுக்கு தடுப்­புக்­கா­வல் ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 16ஆம் தேதி­யன்று ஃபைசால் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொள்ள எண்­ணம் கொண்­டி­ருப்­ப­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.