புவாங்காக் பகுதியில் நேற்று முன்தினம் மூண்ட சண்டையில் கத்தி ஒன்று பயன்படுத்தப்பட்டதாகவும் ஆடவர் ஒருவருக்குக் கைகளிலும் முகத்திலும் காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பில் காவலர்கள் ஐந்து ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.
புவாங்காக் ஸ்குவேர் கடைத்தொகுதி அருகே உள்ள புவாங்காக் கிரசண்டில் 24 வயது ஆடவர் ஒருவர் அதே வயதுடைய மற்றோர் ஆடவரைத் தாக்கி உள்ளதாக புதன்கிழமை காலை 5.30 மணியளவில் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கத்தியைக் கொண்டு ஒருவர் இன்னொருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கைகலப்புக்குப் பிறகு காயமடைந்தவர் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றார்.
அதே நாளில் காவலர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான படங்களைக் கொண்டு பொதுமக்களிடம் விசாரித்து சம்பவம் தொடர்பான அறுவரையும் காவலர்கள் அடையாளம் கண்டனர்.
அதையடுத்து, 21 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் காவலர்கள் கைது செய்தனர். இதற்கிடையே விசாரணையில் 27 வயது பெண் ஒருவரும் உதவி வருவதாகக் கூறப்பட்டது.