சக தங்குவிடுதிவாசியைக் குத்தி, கடித்தவருக்கு 6 மாதச் சிறை தண்டனை

சக தங்குவிடுதிவாசியைக் குத்தி, கடித்தவருக்கு 6 மாதச் சிறை தண்டனை

2 mins read
3fd0a39f-69d2-4e1f-ba98-37dad7c9be97
-

மது அருந்­தி­விட்டு தன்­னு­டன் ஒரே தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் ஆட­வரை முகத்­தில் குத்­தி­ய­து­டன் அவ­ரது விர­லை­யும் கடித்து அதில் முறிவை ஏற்­ப­டுத்­தி­னார் 30 வயது இந்­திய நாட்­ட­வர் ரெங்­க­சாமி கார்ல்­மாக்ஸ்.

இரு­வ­ரும் தரை­யில் உருண்டு புரண்டு ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தொடைப் பகு­தி­யி­லும் கடித்­த­தா­கக் கூறப்­பட்­டது. பின்­னர் மற்ற தங்­கு­வி­டு­தி­வா­சி­கள் வந்து சண்­டை­யைத் தடுத்து நிறுத்­தி­னர்.

குற்­றத்தை நேற்று ஒப்­புக்­கொண்ட கார்ல்­மாக்சுக்கு ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி­யன்று நடந்த சம்­ப­வத்­தில், செம்­ப­வாங் வட்­டா­ரத்­தில் உள்ள தங்­கு­வி­டு­தி­யின் மூன்­றா­வது மாடி­யி­லி­ருந்து திரு கிருஷ்­ணன் கார்த்­தி­கே­யன், 35, தனது தண்­ணீர் புட்­டி­யில் நீர் நிரப்­பு­வ­தற்­காக ஏற்­கெ­னவே அதில் இருந்த நீரை வெளியே ஊற்­றி­னார்.

இரண்­டா­வது மாடி­யில் நின்­று­கொண்­டி­ருந்த கார்ல்­மாக்ஸ் மீது தண்­ணீர் பட்­ட­தால் உடனே மேல் மாடி­யில் இருந்த கிருஷ்­ணனை வழி­ம­றித்து நடந்­த­தைப் பற்றி கேட்­டார்.

இரு­வ­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­ட­போ­தும் அது கைகலப்பாக அன்று மாற­வில்லை.

பின்­னர், செப்­டம்­பர் 5ஆம் தேதி­யன்று தன் அறைக்கு வெளியே மது போதை­யில் இருந்த கார்ல்­மாக்சுக்கு, மீண்­டும் மூன்­றா­வது மாடி­யி­லி­ருந்து தண்­ணீர் பட்­ட­து­போன்ற உணர்வு ஏற்­பட்­டது.

முன்­ன­தாக நடந்த சம்­ப­வம் அவர் நினை­வுக்கு வரவே, திரு கிருஷ்­ணனை மீண்­டும் சந்­திக்க மேல் மாடிக்­குச் சென்­றார்.

தம் குடும்­பத்­தா­ரி­டம் கைபே­சி­யில் பேசிக்­கொண்­டி­ருந்த கிருஷ்­ணனை, மூக்­கில் குத்­தி­ய­து­டன் தரைக்­குத் தள்­ளி­னார் கார்ல்­மாக்ஸ். இத­னால் கிருஷ்­ணன் தலை­யில் அடிப்­பட்­டது.

கீழே கிடந்த கிருஷ்­ணனை கார்ல்மார்க்ஸ் பல­முறை குத்­தி­ய­து­டன் அவ­ரின் மோதிர விர­லை­யும் கடித்து ரத்­தம் கசி­யச் செய்­தார்.

பின்­னர், இரு­வ­ரும் தரை­யில் புரண்­ட­வாறு தொடைப் பகு­தி­யில் ஒரு­வரை ஒரு­வர் கடித்­துக்­கொண்­ட­னர்.

கிருஷ்­ண­னுக்கு ஏற்­பட்ட காயங்­க­ளுக்­கான மருத்­து­வச் செலவு $3,880. இதை அவ­ரின் முத­லாளி ஏற்றுக்கொண்டார்.

தடுப்­புக் காவ­லின்­போது தமிழ் மொழி­பெ­யர்ப்­பா­ளர் மூலம் கார்ல்­மாக்ஸ் தன் செய­லுக்கு மன்­னிப்பு கேட்டுக்கொண்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.