மலாய் காவல் அதிகாரியிடம் இனவாதப் பேச்சு: ஆடவருக்கு $3,800 அபராதம்

மலாய் காவல் அதிகாரியிடம் இனவாதப் பேச்சு: ஆடவருக்கு $3,800 அபராதம்

1 mins read
61afdd1f-5fe7-49c0-956f-cc0c1b1c26d1
-

பொது இடத்­தில் ரகளை செய்­த­தும் இல்­லா­மல் கைதான பின்­னர் காவல் அதி­காரி ஒரு­வ­ரை­யும் இன­வா­தப் பேச்­சால் அவ­ம­தித்­த­தற்­காக 31 வயது ஊய் ஜியா ஜுன் என்­ப­வ­ருக்கு $3,800 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள ஆங்­கர்­வேல் ரோடு புளோக் ஒன்­றுக்கு சிங்­கப்­பூ­ர­ரான ஊய் அக்­டோ­பர் 20ஆம் தேதி­யன்று சென்­றி­ருந்­த­தா­க­வும் ஒன்­ப­தா­வது மாடி­யில் அமைந்­துள்ள ஒரு வீட்­டின் கதவை இரவு 11 மணி­ய­ள­வில் ஊய் பல­மா­கத் தட்­டிக்­கொண்­டி­ருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

நிதா­ன­மாக நடந்­து­கொள்­ளு­மாறு அங்கு வந்த அதி­கா­ரி­கள் பல­முறை கூறி­யும், ஊய் அடங்க மறுத்­தார்.

பின்­னர், கைது செய்­யப்­பட்ட ஊய் காவ­லர்­க­ளின் வாக­னத்­தில் ஏற்­றப்­பட்­டார். காவல் அதி­கா­ரி­களால் உட்­லண்ட்ஸ் காவல் பிரி­வுத் தலை­மை­ய­கத்­திற்­குக் கொண்டு செல்­லப்­பட்ட வழி­யில், காவல்நிலைய ஆய்வாளர் நூர் யுஸ்­மான் அப்­துல் கனியை ஊய் தகாத சொற்­க­ளால் திட்­டி­னார்.

அதே அதி­கா­ரியை நோக்கி இன­வா­தச் சொற்­க­ளை­யும் ஊய் கூறி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.