இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலுள்ள 'இண்டா புரி கோல்ஃப் ரிசோர்ட்' என்னும் உல்லாச தங்குமிடத்தை இடிப்பதன் தொடர்பில் அந்தக் கட்டடத்தின் மேம்பாட்டாளருக்கும் அதில் தங்கியிருப்போருக்கும் இடையில் பிரச்சினை வெடித்துள்ளது. 1993ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்த உல்லாசத் தங்கு
மிடத்தில் உள்ள அடுக்குவீடுகளை நூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்டகாலக் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகின்றனர்.
சில சிங்கப்பூரர்களும் அவர்களில் அடங்குவர். இந்த விவகாரத் தால் தற்போது அவர்கள் கவலை அடைந்துள்ளனர். உள்ளூர்வாசிகளும் அந்தத் தங்குமிடத்தில் அடுக்குவீடுகளைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
'குத்ரீ ெஜயா இண்டா ஐலண்ட் ரிசோர்ட்' என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்தக் கட்டடம். நான்கு தளங்களைக் கொண்ட உல்லாசத் தங்குமிடம் பழையதாகி விட்டதாகக் கூறி, அதை இடிக்க முடிவு செய்துள்ளது இந்நிறுவனம்.
முழுமையாக அதனை அப்புறப்படுத்திவிட்டு 10 தளங்களைக் கொண்ட வர்த்தகக் கட்டடத்தை எழுப்பவும் அது திட்டமிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இம்
மாதம் 13ஆம் தேதி இடிப்பு வேலைகள் தொடங்கின. அந்தக் கட்டட வளாகத்தில் உள்ள 10 அடுக்குவீடுகளில் ஐந்து இடிக்கப்பட்டன. ஆனால் அந்த வீடுகளைக் காலி செய்யாத குடியிருப்பாளர்கள் பலர் இடிப்பதை எதிர்க்கின்றனர்.
சட்டவிரோதமாக தங்களது வீடுகளைக் கைப்பற்றி பலவந்தமாகத் தங்களை வெளியேற்றுமாறு தங்குமிட மேம்பாட்டாளர் வற்புறுத்துவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பிரச்சினை பெரிதாகி, வீடுகளைக் குத்தகைக்கு எடுத்திருப்போருக்கும் மேம்பாட்டு நிறுவன ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அமலாக்க அதிகாரிகளும் இந்தப் பிரச்சினையில் சிக்கிக்கொண்டனர். அதன் விளைவாக, கைகலப்பும் அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையும் இடம்பெற்றன.
"குடியிருப்பாளர்களுடன் மிகவும் பணிவாக நடந்துகொண்டோம். அவர்கள் மீது பரிவுகாட்டும் விதமாக மூன்றாண்டுகளுக்கு இலவசமாகத் தங்க அனுமதித்தோம். அங்கு தங்கியிருந்த பலரும் குத்தகைக் காலம் 2018ல் காலாவதியாவதைத் தெரிந்துகொண்டு மற்றவர்களிடம் வீட்டை மாற்றிவிட்டனர். காலாவதி பற்றி அவர்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை," என்று மேம்பாட்டாளரின் வழக்கறிஞர் சிஎன்ஏ செய்தியாளரிடம் கூறினார்.
ஆனால், 25 ஆண்டு குத்தகை காலாவதியானதும் மீண்டும் புதுப்பித்துத் தருவதாக மேம்பாட்டாளர் கூறியதாகவும் அதற்காக நிறைய பணம் தந்திருப்பதாகவும் குடி
யிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வளாகத்தில் சிங்கப்பூரர்கள் குறைந்தபட்சம் 14 வீடுகளைக் குத்தகைக்குப் பெற்றிருப்பதாகவும் கொள்ளைநோய் காரணமாக விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டால் அவர்களால் நேரில் வந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலவில்லை என்றும் சிந்தியா வீ-ஹோஃபர், 70, என்னும் சிங்கப்பூரர் கூறினார்.
மற்றொரு சிங்கப்பூரரான பாட் குவோக் சார்பாக அவரது சகோதரி கூறுகையில், 2019ல் தமது சகோதரரின் வீட்டின் குத்தகை நீட்டிப்புக்காக இண்டா புரி நிர்வாகம் $300,000க்கு மேல் நிர்ணயித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் அதனை மறுத்த வழக்கறிஞர் திரு மங்காரா மனுருங், குடியிருப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப் பத்திரத்தில் குத்தகை நீட்டிப்புப் பற்றியோ புதுப்பிப்பு பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார்.
"காலியாக உள்ள வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டதாகவும் ஆட்கள் தங்கியுள்ள கட்டடத்தை இடிப்பது மனிதாபிமானமற்ற செயல். அதனை நாங்கள் செய்யவில்லை," என்றார் அவர்.
தற்போது இந்த விவகாரம் பாத்தாம் வட்டார நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
சிங்கப்பூரர்கள் உட்பட 60 அடுக்கு வீட்டு உரிமையாளர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் ராபி பத்து பாரா, வீடுகளின் மின், தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்ட தாகக் கூறினார்.
உல்லாச அடுக்குவீடுகள் இடிப்பு, கைகலப்பு, கைது, நீதிமன்றத்தில் வழக்கு

