கொடுத்து உதவிய உள்ளத்துக்கு அமைச்சர் பாராட்டு

கொடுத்து உதவிய உள்ளத்துக்கு அமைச்சர் பாராட்டு

1 mins read
84abb383-f624-422c-9ae8-ca90d623b619
-

தேவை­யுள்­ளோ­ருக்­குக் கொடுத்து உத­வு­வ­தில் மகிழ்ச்­சி­ய­டை­யும் தாதி ஒரு­வர் நேற்று பாராட்­டப்­பட்­டார். அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­ம­னை­யின் வலி­நீக்­கப் பரா­ம­ரிப்பு தாதி­யாகப் பணி­பு­ரி­யும் எமிலி யாப், 22, என்­பவர் அந்­தப் பாராட்­டைப் பெற்­றார். தமது குடும்­பத்­துக்கு அர­சாங்­கம் வழங்­கிய $100 சிடிசி பற்­றுச்­சீட்டை அப்­பர் தாம்­ச­னில் உள்ள செயின்ட் தெரசா இல்­ல­வா­சி­

க­ளுக்கு உண­வ­ளிக்­கப் பயன்­ப­டுத்­தி­னார் அவர்.

100 கேரட் கேக் உணவுப் பொட்­ட­லங்­களை அந்த இல்­ல

­வா­சி­க­ளுக்கு அவர் வழங்­கி­னார்.

டன்­னர்ன் அக்­கம்­பக்­கக் குழு அடித்­தள அமைப்­பின் உறுப்­பி­ன­ரான திரு­வாட்டி யாப், புக்­கிட் தீமா உண­வங்­காடி நிலை­யத்­தி­லுள்ள கேரட் கேக் கடைக்­கும் உத­வு­வது அவ­ரது நோக்­க­மாக இருந்­தது.

தமது குடும்பத்துக்காக வழங்­கப்­பட்ட பற்­றுச்­சீட்டை இரு­த­ரப்­பி­ன­ருக்கு உத­விய அவ­ரது செயலை நேற்­றைய ஒரு நிகழ்­வில் தேசிய வளர்ச்சி, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் வெகு­வா­கப் புகழ்ந்­தார்.

திருவாட்டி எமிலியும் மேலும் சிலரும் ஒன்றுசேர்ந்து மூத்தோரை உள்ளடக்கிய அந்த இல்லவாசி களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.