செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3a660888-90ae-4596-8c9a-0dc0374394a9
-

பள்ளி நாட்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி: பரிசீலிக்க வேண்டுகோள்

தடுப்­பூசி போட அழைக்­கப்­பட்ட மூன்­றில் ஒரு குழந்­தைக்­கும் மேல் அவர்­க­ளின் பெற்­றோ­ரால் முன்­ப­திவு செய்­யப்­பட்டு உள்­ள­னர். குழந்­தைத் தடுப்­பூ­சிக்­கான டிசம்­பர் மாத முன்­ப­திவு அனைத்­தும் நிரம்­பி­விட்­ட­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கல்வி அமைச்­சின் பள்­ளி­க­ளி­லும் மத­ரசா பள்­ளி­க­ளி­லும் அடுத்த ஆண்டு தொடக்­க­நிலை 4 முதல் 6 வரை செல்­லக்­கூ­டிய குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வ­தற்­கான அழைப்பு அனுப்­பப்­பட்­டது. தடுப்­பூசி பதிவு கடந்த புதன்­கி­ழமை தொடங்­கி­ய­தும் குழந்­தை­க­ளின் பெற்­றோ­ருக்கு சுமார் 110,000 குறுந்­த­க­வல்­கள் மூலம் அழைப்பு அனுப்­பப்­பட்­டது. தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்­யு­மாறு அந்த அழைப்­பில் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது. மேலும், பதி­வுக்­கான இணைப்­பும் அந்த குறுந்­த­க­வ­லில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது. ஜன­வரி மாதத்­திற்­கான வார­யி­றுதி தடுப்­பூசி நட­வ­டிக்­கைக்கு முன்­வந்­தோர் விகி­தம் சிறப்­பாக இருப்­ப­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வியா­ழக்­கி­ழமை இரவு தமது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தி­ருந்­தார். அதே­நே­ரம், வார நாட்­க­ளி­லும் தங்­க­ளது குழந்­தைக்கு தடுப்­பூசி போடு­வது பற்றி பெற்­றோர் பரி­சீ­லிக்க வேண்­டும் என்­றும் பள்ளி நாட்­களில் தடுப்­பூசி போட்ட பின்­னர் பாதிக்­கப்­படும் குழந்­தை­

க­ளுக்கு மருத்­துவ விடுப்பு வழங்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

உணவகத்திற்கு விதிக்கப்பட்ட

ஒருமாதத் தடை விலகியது

சுகா­தா­ரக் குறை­பாடு கார­ண­மாக 'கேட்­ட­ரர் ஆன் அண்ட் ஆன் டைனர்ஸ்' உண­வ­கத்தை தற்­கா­லி­க­மாக மூட பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவு விலக்­கப்­பட்­டுள்­ளது. அந்த உண­வ­கம் நேற்று (டிசம்­பர் 24) முதல் இயங்க அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது. கடந்த மாதம் அந்த உண­வ­கத்­தில் சாப்­பிட்ட 73 பேர் இரைப்­பைக் குடல் அழற்­சிக்­கான அறி­கு­றி­கள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பும் தெரி­வித்­தன. அத­னைத் தொடர்ந்து நவம்­பர் 23 முதல் கிட்­டத்­தட்ட ஒரு­மாத காலத்­திற்கு அந்த உண­வ­கத்தை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அட்­மி­ரல்டி கடைத்­தொ­கு­தி­யில் அமைந்­துள்ள அந்த உண­வ­கம் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் நிபந்­த­னை­

க­ளுக்­குக் கட்­டுப்­பட்டு நடப்­ப­தாக இரு அர­சாங்க அமைப்­பு­களும் கூட்­டா­கத் தெரி­வித்­துள்­ளன. கெட்­டுப்­போ­கும் தன்மை கொண்ட அத்­தனை உணவு வகை­க­ளை­யும்

அப்­பு­றப்­ப­டுத்­தி­விட்டு உண­வ­கத்­தின் சமை­ய­ல­றை­யும்

பாத்­தி­ர­ங்­கள் மற்­றும் மேசை, தரை அனைத்­தும் துரப்­பு­ரவு செய்­யப்­பட்டு உள்­ள­தாக அவை தெரி­வித்­தன. இருப்­பி­னும் உணவுப் பாது­காப்பு நடை­மு­றை­கள் தொடர்­பாக அந்த உண­வ­கம் தொடர்ந்து கண்­கா­ணிப்பு வளை­யத்­தி­னுள் வைக்­கப்­படும் என்­றும் கூட்­ட­றிக்கை குறிப்­பிட்­டது.